பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கவியின் கனவு ഭ്. திரைக்குப் பின் பொதுமை வழிபாடு கூட்டமுதப் பாடல் (மோகனப் பண்ணில், பலவகைத் தாள கதியில் பாடலாம்) வான்மழை பெருகி வளமுறச் சாந்தம் சூழ்ந்திட வையம் சுகவழிதரும் ஒர் ஆதிபரம் பொருளாம் - ஜெக ஜோதி தரும் அருளாம் ஆதவன் - அதிசய ஒளிதருமதி அந்தரமதில் - மிக சுந்தரமதாய் மிளிரும்பலவகை தாரகை மலர்கள் ஜோதியின் பகுதிகளாம் மானிட உருவம் அறிவுடனே உலகினில் வாழ்வதே உயிர் எனுமொரு ஒளியின் செயலே உணருவோமிதை... வாழ்வெனும் நதியின் வேகம் விதியின் வலியால் விரைந்து ஓடும் ஆதலால் மாமதி.எனும் அணையினாலே வாழ்க்கை நதியின் பெருக்கை நிறுத்திச் | சோதனை அலையாய் எழுமாம் பாவமும் பொய்புலை பலவும் அதற்குக் களைத்துத் திகைத்துத் துயரினில் அழியா வகையை விரைவில் அருளால் புரிவோம் வருவீரே விதியை அஞ்சோம் அதை நாம் வெல்வோமே நலமே செயவே வருவீர் உலகீரே!