பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியின் கனவு 32 !ు{Fళá : கவி : £Tశf : கவி : í L)fTgðð? : கவி o Í t)fI GððT : தோம். காலம் வந்துவிட்டது. கோழை ஆயிரம் முறை சாகிறான். ஆமாம், வீரன் மாத்திரம் சாகாமலா இருக்கான்? வாங்க, குழந்தைகளையெல்லாம் அழச்சுகிட்டு எங்கேயாவது வேறு நாட்டுக்குப் போயிடுவோம். ஆபத்து வேகமா வந்துகிட்டிருக்குதுங்கய்யா. தம்பி பிறந்த நாட்டை விட்டு ஒட நானொன்றும் நன்றி கெட்டவனல்ல. ஆபத்து. அது ஒன்றும் ஆயிரம் கால் பூதமல்ல, தம்பி. அதைவிடப் டயங்கரமானதுங்க அது சர்வாதி காரி சொன்னபடி அவன்மீது தாங்கள் காவியம் எழுதவில்லையாம். அதனாலே ரொம்ப ரோம்பக் கோபமா இருக்கிறான். போனாப் :ோறான், ஏதோ ஒன்னைக் கிறுக்கி அவன் தலைமேலே போட்டுடுங்கய்யா. பாம்பு கிட்டே பகை எதுக்குங்க? - கொடும் புலிக்குப் பயந்து குயில் பாடுவதில்லை, தம்பி நானும் அவனைப் புகழ்ந்து பாடிவிட்டால் இந்த நாட்டின் ஆத்மாவே அவன் காலடியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது என்றுதான் பொருள். என்ன செய்யறதுங்க? ஒன்னு, நாம் உலகத்தோட ஒத்துப் போகணும். இல்லேன்னா, உலகம் நம்மோடி ஒத்து வரும்படி செய்யனுங்க. ஏங்கய்யா, எனக்கொரு சந்தேகம்! நாம் கொஞ்ச நாளைக்கு சர்வபலம் படைத்த இந்தச் சர்வாதி காரியை எதிர்க்க ஆயுதப் புரட்சிக்கு மக்களைத் தயார் செய்தா என்னங்க? அதற்கும் துணிந்து விடலாம் தம்பி. அது ஒன்றும் அவ்வளவு பெரிய காரியமல்ல. ஆனால். உயிர்ச் சேதமாயிடுமேன்னு பயப்படlங்களா?