aso.4. சுந்தரம் - 35
Ls}fTGĦET
கவி
ᎥᏝajᎢüᎢ
கவி
i DfTGððr
கவி
என்னங்க உலகம் இது உலகம் முட்டாள்களின் சந்தைங்க. முரட்டுப் பசங்கள் நிறைந்த மூட மரக்காடுங்க. - - வேடிக்கை உலகம், கொடியவர்கள் சிலர் - அவர் களுக்கு இரையாவோர் மிகப்பலர். கெடுப்பவர் சிலர் கெடுவோர் மிகப் பலர் தீமையை எதிர்க்க முடியாத ஆமைகள் கூட்டமாகி விட்டது நமது சமுதாயம். ஆம் அது ஒர் ஒய்வில்லாச் சந்தை தான். இன்பதுன்பம் எல்லாம் இதன் விற்பனைப் பொருள்கள், தம்பி! பயத்தால் நடுங்காதே அச்சம் ஒரு மாயை அதை வெல்வதே நல்லவர்
c35l_Gð) LL).
நடக்காதுங்க, நீங்க ஒருத்தர் கதறி என்னங்கோ பிரயோசனம்? கோடிக்கணக்கான கோட்டான் களுக்கு மத்தியிலே ஒரே ஒரு குயில் கூவினா, அது யாருக்குங்க கேக்கப் போகுது? தம்பி! சில பேர் தியாகத்தால் பல பேர் வாழ்வது தான் உலக நியதி. அந்த நியதிக்கு நானும் பலியாக வேண்டுமானால் அதற்கும் துணிந்து தான் தம்பி இருக்க வேண்டும். இந்தா, இந்தச் சுவடியை வைத்துக்கொள். என்னாங்க இது, நாடகங்களா..? ஆ. கனவு. கனவு! அடடே, இதை எழுதி முடிச்சிட்டிங் 5)6ΥΤΙΤΡ
ஆம் விரைவில் நனவாகப் போகும் என் கனவு! இந்த நாடகம் என் கனவை உலகில் நிறைவேற்றி விடும், தம்பி! இது ஒன்றே போதும் இந் நாட்டின் உறக்கத்தை நீக்க, -
இது இந்த நாட்டின் விதியை வெல்லப் போகும்
வெற்றிப்படைக் கருவி என் உயிரின் விருப்பம்,
ஆத்மாவின் துடிப்பு: நம் நாட்டின் குரலை இந்த நாடகத்தில் கேட்கப் போகிறாய். இதை
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/37
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
