பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 53 சுகதேவன் சர்வா சுகதே சர்வா சுகதே சர்வா சுகதே சர்வா சுகதே சர்வா (காவலர்கள் தங்கள் கைகளிலிருந்து கசைகளைத் தாராளமாக வீசத் தொடங்குகிறார்கள். கைதி கதுை வந்தவிப்போன உடலிவிருத்து சில துளி இரத்தமும் அக்கசையடியால் வெளி வந்து கொண்டிருந்தது. அச்சமயம் சேனாதிபதியும் சிறை மத்திரியுமான சுகதேவன் படிகளிலிருந்து இறங்கி வருகிறான். இவன் ஒரு புதுயுக இளைஞன்/ .

காவலர்களே, நிறுத்துங்கள் எரிகிற நெருப்பிலே ஏன் மேலும் நெய்யை வார்க்கிறீர்கள்? சிறிது சிறிதாக உயிர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள் கைதிகள்! அவர்களை ஏன் மேலும் சித்திரவதை செய்கிறீர்கள்?

(துழைந்த வண்ணம் வேந்தன் கட்டளை! வெந்த புண்ணிலே வேலை துழைப்பதா? குற்றவாளிகளைத் திருத்த உயிரை அணு அணுவாகச் சிதைப்பதுதான் குற்றவாளிகளைத் திருத்தும் முறையா? கொலை மனம் பட்ைத்த பாவ ஜென்மங்களைத் திருத்த. கொடுமையான முறைகள்தான் மருந்தா? மருந்து ஊட்டுகையில் கசக்கத்தான் செய்யும். நோய் தீர்ந்த பின் இந்நோயாளிகள் புத்துயிர் பெற்றுப் புனிதமடைவார்கள். மருந்து, நோய் தீர்க்கும். ஆனால், நீங்கள் இவர் களுக்குத் தருவது கொல்லும் நஞ்சினைத் தவிர வேறில்லை. ஒழியட்டுமே. நீதிக்கும் சட்டத்திற்கும் அடங்காத துராத்மாக்கள் தொலைவதால்,