60
கவியின் கனவு
சுகதே
சுகதே
கைதி1
சுகதே
கைதி-2 :
கைதி-3 :
சுகதே
வீரர்களே! இவரைக் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். வீணாக இப்படிக் கத்தினால் இவர் உடல் நலம் நலிந்து போகும்.
(ഥ്സ്മ கவிஞர் ஏதோ பாட வீரர்கள் கவியின் வாயைக் கட்ட/
ஏனய்யா, இவர் எப்போதுமே இப்படித்தானா?
ஆமாங்க, எசமான் எப்பவுமே இப்படித்தானுங்க! வாயின் கட்டவிழ்த்தால் கோடை மழை மாதிரி கவிதையும் பாட்டும் குமுறுமுங்க. -
(கைதிகளிடம் ஐயா. நீங்களெல்லாம் வருத்தப் படாதீர்கள். உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல ஏற்பாட்டை வேந்தரிடம் சொல்லி விரைவில் செய்கிறேன்.
எங்களுக்கு வேறே ஒண்ணும் வேண்டாங்க, என்ன குற்றத்துக்காக அடைச்சு வைச்சிருக்கி றாங்கன்னு தெரிஞ்சா அதுவே பெரிய ஆறுதலுங்க.
இதோ பாருங்க, உடம்பெல்லாம் இரத்தம் வரும்படியா அடிச்சுடறாங்க, வலி தாங்க முடியலிங்க,
(வீரர்களிடம், அடே இங்குள்ள வீரமடையர்
களே! உங்களுக்கு இரக்கம் என்பது சிறிதும் இல்லையா? இப்படியா அடிப்பது? இனிமேல் இந்தக் கைதிகளைக் கருணையோடு நடத்த வேண்டும், தெரியுமா? துணைபதிகாரியிடம்/ பாவம், இந்தப் பைத்தியக்காரக் கைதியின் நிலையைப் பார்த்தால், ஏதோ ஒரு நிறைவேற முடியாத ஏக்கக் கனவால் அதிர்ச்சியுற்றவர் போலக் காணப்படுகிறார்; நிராசையினால் மனித மனம் நிலை குலைந்து விட்டால் அதன் முடிவு இதுதான் போலும் பாவம், இக்கவியின் மனத்
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/62
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
