பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7շ கவியின் கனவு வீரசி சர்வா (ஒலியொடு ஒளிபெருக்க ஆதியொடு மிதி நடக்க இசையொடு இதயம் திற்க, கண்வழி செய்கை பாய, சரத்திவே துரிதம் துண்7ை, மார்பிலே ஆசைவிம்ம மயங்கியே ஆடலுற்ற7ள். உதட்டிலே ஊறிப் பாயும் உன்னதிக் காமப் பழமது! அத்தனையும் அனுபவித்தோர், அரசனும் சர்வாதி காரியுந்தான். கலைமானைக் கண்டு உவகை துள்ளும் காட்டுப்புவியைப் போல் சர்வாதிகாரி அவள் மேனியின் மின்னவிலே கண் சிவக்க விற்றிருத்தான். வீர சிம்மனோ என்றால், மூச்சுக் கூட விடமுடியாத நிலையில் தனது பாச மனைவி வின் நாட்டியப் பாத துரசியில்ே சரணாகதி படைத்து சவமெனச் சாய்ந்திருந்தான் நாட்டியம் முடித்ததும் அரசன் மெதுவாக எழுந்து பேசுகிறான்.) J (ஊர்வசிக்கு மாலையிட்டு, அவையோர்களே! அழகுமணித் தெய்வம் ஆடல் கண்டு மகிழ்ந்தோம். இக்கலை விழாவைப் பற்றி நம் குருதேவர் சில மொழிந்தருளுவார். (எழுந்து சிரமப்பட்டு பெருங்குடி மக்களே! ரசிக சிகா மணிகளே! கலையின்பம் என்னவென்று, வாழ்வைப் பூரணமாக ருசிக்கும் உங்களுக்கே நன்கு தெரியும். கலைஞானம் மிகமிகப் புனித மானது, அதிலும், பரத சாத்திரம் மிகக் கடின மானது. அக்கலை நமது மகாராணி ஊர்வசி தேவியிடம் பூரணம் பெற்று விட்டது. இங்கே ஜதியோடு லயம் எழுந்தது! சுருதியோடு சுகம் பிறந்தது! இசையோடு இதயம் சென்றது! அசைவோடு அழகுயர்ந்தது! விழியோடு விதி விளைந்தது முழவோடு மூச்சுயிர்த்தது! குழலோடு குரல் குழைந்தது! உலகக் கலைஞர் எல்லாம் ஒருங்கே போற்றி சகலகலா வல்லரசி, நாட்டிய வல்லி, மெல்லரசி, சரஸாம்ருத ஞான சரஸ்வதி