பக்கம்:கவி பாடலாம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கவி பாடலாம்

(4)கூழை: முதல் மூன்று சீரிலும் அமைவது.

வேதம் விரித்த வியன்மலர்த் திருவாய். இந்த அகவலடியில் கூழை மோனை வந்தது.

வேலன் பாலன் போலும் நெஞ்சன். இந்த ஆசிரிய அடியில் கூழை எதுகை வந்தது. (5) மேற்கதுவாய்: இரண்டாம் சீரிலன்றி மற்ற மூன்று சீர்களில் அமைவது.

ஆறு முகத்தா னாகும் அமுதம். இதில் மேற்கதுவாய் மோனை வந்தது.

கற்றவர் போற்றும் நற்றவச் சுற்றம். இதில் மேற்கதுவாய் எதுகை வந்தது. இரண்டாம்

சீரில் முதல் எழுத்து நெடிலாக வந்தமையால் எதுகை அமையவில்லை. -

(6) கீழ்க்கதுவாய்: மூன்றாவது சீரிலின்றி மற்ற மூன்று சீர்களில் வருவது.

அவிர்மதி அனைய திருநுதல் அரிவை. இதில் கீழ்க்கதுவாய் மோனை வந்தது.

அன்ன மென்ன அழகுற மன்னும். இதில் கீழ்க்கதுவாய் எதுகை வந்தது. (7) முற்று: நான்கு சீரிலும் வருவது.

“தூய துணைவன் துறந்தமை தூற்றும்.” இதில் முற்று மோனை வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/129&oldid=655721" இலிருந்து மீள்விக்கப்பட்டது