சிறப்பில்லாத எதுகை மோனைகள் - 133
புலைநவின்ற மெய்யழிந்தும் புகழுடம்பு பெற்றவர்கள் அலைநவின்ற கடற்புவியில் அனைவரினும் மேலவரே. இதில் தலையாகெதுகை வந்தது.
‘அகர முதல எழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே உலகு.” இதில் இடையாகெதுகை வந்தது.
“தக்கார் தகவிலர் என்பதவரவர்
எச்சத்தாற் காணப் படும்.” இதில் கடையாகெதுகை வந்தது.
மூவகை மோனை: சீர் முழுவதும் ஒன்றுவது தலையாகு மோனை. ஒரெழுத்தே ஒன்றுவது இடையாகு மோனை; பிற கடையாகு மோனை.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.” - இதில் உள்ள அடிமோனை முழுச்சீரும் ஒன்றி வந்தமையால் தலையாகு மோனை.
- மாவும் புள்ளும் வாழும் வகையில் :
மாநில வுயிரெலாம் மகிழ்ந்தினி திருப்ப மாட்சிபெற் றிலகிய மன்னனிம் மன்னனே, இதில் இடையாகு மோனை வந்தது. பிற வகையாக வருவன கடையாகு மோனை. -
வேறு சில எதுகைகள்: இரண்டாம் எழுத்தின் மேல் ஏறிய உயிர் ஒன்றி வந்தால் உயிரெதுகையாகும்.
“துளியொடு மயங்கிய தூங்கிரு ணடுநாள்
அணிகிளர் தாரோயருஞ்சுர நீந்தி