142 கவி பாடலாம்
இறுதி அடியின் இறுதிச் சீரும், முதல் அடியின் முதற் சீரும் அந்தாதியாக அமைந்திருப்பதையும் கவனிக்க வேண்டும்.
இரட்டைத்தொடை: ஒரடி முழுவதும் வந்த சொல்லே திரும்பத் திரும்ப வரும்படி தொடுப்பது இரட்டைத் தொடை. இது நாற்சீரடிகளில் வருவது.
“ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
விளக்கினுட் சீறெரி ஒக்குமே ஒக்கும் குளக்கொட்டிப் பூவின் நிறம்.”
இதில் முதலடியில் இரட்டைத் தொடை வந்தது.
செந்தொடை: எந்தத் தொடையும் இல்லாமல் வருவது செந்தொடை.
“ வேங்கை வியன்சினை ஏறி
மயிலின மகவு நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே.”
இந்தப் பாட்டு மோனை, எதுகை முதலிய தொடை களில் ஏதும் வாராமல் தொடுத்தமையால் இது செந்தொடை.
பிற வகைகள்: மேலே சொன்ன அடிமுதல் முற்று வரையில் உள்ள தொடை வகைகள் நாற்சீரடிகளிலே அமைவன. இந்த வகைகளையன்றி வேறு சில வகைகளும் மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை என்னும் தொடைகளுக்குக் கூறுவதுண்டு. அவை சிறப்புடையன அல்ல. r
கடை, கடையிணை, பின், கடைக்கூழை, இடைப் புணர் என ஐந்து வகைப்படுவன அவை.