174 கவி பாடலாம்
வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவுக்கு உதாரணம்
வருமாறு:
(தரவு)
‘விளங்குமணிப் பசும்பொன்னின் விரித்தமைத்துக்
- கதிர்கான்று துளங்குமணிக் கனைகழற்காற்றுறுமலர் நறும்பைந்தார்ப் பரூஉத்தடக்கைமதயானைப்பனையெருத்தின்மிசைத்தோன்றிக் குரூஉக்கொண்டமணிப்பூனோய் குறையிரந்து முன்னாட்கண் மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கும் மல்லர்க்கும் தாயாகித் தலையளிக்கும் தண்டுறை யூரகேள்:
(தாழிசை)
காட்சியாற் கலப்பெய்தி எத்திறத்தும் கதிர்ப்பாகி மாட்சியால் திரியாத மரபொத்தாய் கரவினால் r பிணிநலம் பிரிவெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய அணிநலம் தனியேவந் தருளுவது மருளாமோ? (1)
அன்பினால் அமிழ்தளைஇ அறிவினாற் பிறிதின்றிப் பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப் பெருவரைத்தோ ளருளுவதற் கிருளிடைத் தமியையாய்க் கதிர்வளைத்தோள் கதிர்ப்பிக்கும் காதலும் காதலோ? (2)
பாங்கனையே வாயிலாப் பலகாலும் வந்தொழுகும் தேங்காத கரவினையும் தெளியாத இருளிடைக்கண் குடவரைவேய்த்தோளிணைகள் குளிர்ப்பிப்டான்தமியையாய்த் தடமலர்த்தார் அருளுநின் தகுதியும் தகுதியோ? (3)