பக்கம்:கவி பாடலாம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசையும் சீரும் x 41

நிரையாகக் கொள்ளலாம், கலா என்பது போல. ஆனால் இந்தப் பாட்டில் மனையி என்று யி தனியே முதற் சீரில் சேர்ந்து பிரிந்து ஒலிக்கிறது. னிங் அடுத்த சீரில் சேர்ந்து பிரிந்து ஒலிக்கிறது.

இப்போது இதந்தரு என்ற பாட்டை அசைகளாகப் பிரித்துப் பார்க்கலாம்: -

இதந்தரு மனையி னிங்கி நிரைநிரை நிரைநேர் நேர்நேர்

இடர்மிகு சிறைப்பட்டாலும் நிரைநிரை நிரைநேர் நேர்நேர்

பதந்திரு விரண்டு மாறிப் நிரைநிரை நிரைநேர் நேர்நேர்

பழிமிகுத் திழிவுற் றாலும் நிரைநிரை நிரைநேர் நேர்நேர்

விதந்தரு கோடி யின்னல் நிரைநிரை நேர்நேர் நேர்நேர்

சுதந்தர தேவி நின்னைத் நிரைநிரை நேர்நேர் நேர்நேர்

தொழுதிடன் மறக்கி லேனே. நிரைநிரை நிரைநேர் நேர்நேர்.

இந்தப் பாட்டில் உள்ள சீர்கள் யாவுமே இரண்டு அசைகளால் ஆனவை; அவற்றைச் ஈரசைச் சீர் என்று சொல்வார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/42&oldid=655877" இலிருந்து மீள்விக்கப்பட்டது