பக்கம்:கவி பாடலாம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெடுத்து அவற்றில் உள்ள பிழைகள் இன்னவை என்பதைச் சுட்டிக் காட்டினேன்.

இந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தக வடிவில் வெளியிடும் வாய்ப்பு இப்போது கிடைத்தது. ‘மஞ்சரி'யில் வெளியான வினாவிடை களை அப்படியே வெளியிடுவதில் பயன் இல்லை யென்ற எண்ணத்தினால் சிலவற்றை மாத்திரம் தெரிந்தெடுத்துக் கட்டுரைகளின் பின்னே கொடுத் திருக்கிறேன்.

இது புத்தக உருவில் வர வேண்டும் என்ற விருப்பத்தைப் பல அன்பர்கள் தெரிவித்தார்கள். இதனால் கவிதையைப் புதியதாக எழுதும் அன்பர்கள் ஒரளவேனும் பயனடைவார்கள் என்றே நம்புகிறேன்.

இந்தக் கட்டுரைகளைத் தம் பத்திரிகையில் வெளியிட்டுதவிய மஞ்சரி'யின் ஆசிரியருக்கு என் நன்றியறிவு உரியது. இதனைப் புத்தக உருவில் வெளியிடும் மணிவாசகர் நூலகத்தாரிடத்தும் நன்றி காட்டும் கடப்பாடுடையேன். இதனை வெளியிடத் தூண்டியவர் என்னுடைய உழுவலன்பரும் சிவபூஜா துரந்தரரும் சிறந்த ரசிகருமாகிய திரு.பழ.சண்முகம் அவர்கள். அவர்களுடைய அன்புக்கு அடையாள மாகவே இந்த நூல் மலர்கிறது. அவர்களுக்கும் என் நன்றியறிவு உரியது.

கி.வா.ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/7&oldid=655907" இலிருந்து மீள்விக்கப்பட்டது