52
காகிதம்
அங்கிட்டுமாக’த் திருப்பி, தூக்கச் சடவையும் மீறியதிகிலான எதிர்பார்ப்பு, மனசுக்குள்.
தீ பிடித்த மாதிரியிருந்தது. குப்பென்று பரவிய அனலின் வெக்கை. கண்ணில் தட்டுப்பட்ட முகம்-
அமங்கல முகம். தாலியறுத்தவள். வாழ்க்கை முழுவதும் நார்ப் பறிந்து... சீப்பட்டவள். துன்பத்தையே தின்று ஜீவிக்கிற துர் அதிர்ஷ்டக் கட்டை. வெறுவாய்க் கட்டை மூஞ்சி. ஆவுடைச்சி.
மிளகாயை அரைத்துக் கன்னத்தில் அப்பிய மாதிரியிருந்தது பாண்டிக்கு. மனசெல்லாம் கிடந்து காந்தல் எடுத்தது. எரிச்சல் எரிச்சலாக வந்தது. சண்டாளமாய் வந்த ஆத்திரம்.
கடுப்பேறிய முகம். வெறுப்பின் மடிப்புகளோடு கோணலான முகம். அருவருப்பும் அசூயையுமாய் மனசுக்குள் குமட்டல்.
கூச்சமற்ற குரூரமாய்த் திட்டினான்.
“வெறுங்கழுதை. மூதேவி மூஞ்சியைக் காட்டிக் கிட்டு வீதியிலே வரணுமாக்கும், விடியக்காலையிலே? ச்சே. இவா... மொகரையிலே முழிச்சா... வெளங்குன மாதிரித்தான். இன்னிக்குப் பொழுது பூராவும் அமங்கலம் தான்.”
மனசின் வெக்கை, நீர்க்கொப்பளிப்பின் சத்த அதிர்வில் முகம் காட்டியது. காறிக் காறித் துப்பினான்.
பாண்டிக்குள் திகில். ‘இன்னிக்கு என்னென்ன கெட்ட செய்தி வருமோ? எவன் எவன் கூட எல்லாம் சண்டை சத்தம் வருமோ? என்னென்ன கூத்து நடக்குமோ?’