இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
58
காகிதம்
“சந்தோஷம். நல்லாயிருந்தாச் சரி...”
“உங்களுக்குத் தரவேண்டிய ரூவா, குடுக்காமப் போட்டுட்டேன்லே. கைக்கும் மெய்க்கும் துட்டு அமையலே. வரும்னு நெனச்ச பணமெல்லாம் வழுகிக்கிட்டுப் போயிருச்சு... இப்பத்தான் பணம் கை வந்து சேர்ந்துச்சு.”
“ம்”
“இந்தாங்க ஒங்க ரூவா. தாமதமானதுக்கு மன்னிக்கணும்.”
“பரவாலே பரவாலே... இதெல்லாம் சகஜம்தானே.”
உபசாரம், சாப்பாடு எல்லாம் முடிந்து அந்த ஆள் புறப்படராத்திரி மணி எட்டாகி விட்டது.
வராத கடன் வந்த சந்தோஷத்தில் ததும்பித் தத்தளிக்கிற மனசோடு மனைவியைப் பார்த்தான். பெருமிதமும் பூரிப்புமாக ‘வற்றல் விலை ஏறுமுகம்’ பற்றி விலாவாரியாகப் பேசிக் கொண்டிருந்தபோது-
‘வெறும்’ ஆவுடைச்சியின் முகம் மட்டும் ஞாபகத்துக்கே வரவில்லை பாண்டிக்கு.
19-9-97 குங்குமம்.