70
காகிதம்
“சாமி... தெரியாம நடந்து போச்சு... சாமி யாரு கிட்டேயும் சொல்லிடாதீக... சாமி... புண்ணியமாப் போகுது சாமி.”
மருகி மருகி மன்னிப்புக் கோருகிற வெட்டியான்கள்.
“போங்கடா போங்க” என்று பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டு- மாடுகளை அதட்டிப் பார்த்தார்.
மாடுகள் நகர்ந்தன. ஒரு பெரீ... ய்ய்ய கண்டத்திலிருந்து தப்பித்த மாதிரியிருந்தது, சன்னாசிக்கு. ஆனாலும், மனசுக்குள் தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொள்கிறமாதிரி அடிக்கடி சொல்லிக் கொண்டார், சத்தமில்லாமல்.
‘பேயா..பிசாசா? பிரேதம்தானே?’
அஞ்சுவதற்குரிய பேயல்ல... பிசாசல்ல... ஒரு பெளதீகப் பொருளான அரைப் பிரேதம்தானே என்கிற தொனியில்- அவரது மனக்குரல்.
மாடுகளின் கழுத்துமணிச் சலங்கை. அதன் சங்கீதம். ஒரு சீரான குளம்புச்சத்தம். வண்டிப் பைதாவின் ‘கடக், புடக்’ கென்கிற தாளலயம் தப்பாத சத்தம். தென்திசைக் காற்றின் மென்தழுவல்.
ஆனாலும், சொக்க முடியவில்லை. கண்ணைச் சொருக முடியவில்லை. அதற்குப் பிறகு உறக்கம் ஒட்டவேயில்லை.
வாய்க்கு வந்த பாட்டுகளையெல்லாம் சத்தம் போட்டுப் பாடிப்... பாடி ‘அதை’ மறக்க முயன்றார், சன்னாசி.
மறந்தும் விட்டார்..நிஜமாகவே.