86
காகிதம்
“இந்த வெள்ளை வேங்கைககிட்ட விவசாயிகளை ஒப்படைச்சுட்டு, சர்க்கார் என்ன மயிரா பிடுங்கப் போகுது? வசூலுக்கு மட்டும் அருவாக் கம்பும், மீசையுமா வந்து நிக்குறானுவ.. சாவாடு செத்த பயக..”
இப்படி முச்சாமி முணு முணுத்துக் கொண்டிருந்த போதே....அவரைக் ‘கடித்துக் குதறி முடிக்கப்பட்ட’ விஷயம் பெருமையுடன் பிரகடனப்படுத்தப்பட்டது.
“..முத்துச்சாமி எழுநூத்தி இருபத்தெட்டு”
ஆம், அவரும் குடும்பமும் சேர்ந்து உழைத்த ஒரு வருஷப்பாட்டுக்குக் கிடைத்த மதிப்பு 728தான்!
முச்சாமிக்கு வெடித்து விடுவதைப்போல இதயம் விம்மியது. ‘அடக் கொலைகாரப் பாவிகளா..’ என்று கத்த வேண்டும் போல ஆவேசம் பொங்கி ஆர்ப்பரித்தது.
காயும் பூவுமா இருந்தபோது 1600 என்று வானொலி அறிவித்தது.பழமாகி கடைக்கு வரும்போது 728. இதென்ன கொடுமை? இந்தக் கூத்துதானே வருஷமெல்லாம் நடக்குது?
இதை வைச்சு எப்படிக் கடன் கட்டுறது? மானத்தோட வாழ்றது? இந்த இழவெடுத்த கூத்தாலேதானே வருஷா வருஷம் கடன் ஏறிக்கிட்டே போகுது. எவ்வளவு பாடுபட்டாலும், எவ்வளவு விளைஞ்சாலும்... கடன் கூடிக்கிட்டே போறது, இதனாலேதானே!
கடன் வசூலுக்குப் பட்டாளமா பாய்ஞ்சு வர்ற சர்க்கார். இதுக்கொரு நியாயமா விலை நிர்ணயம் பண்ணியிருந்தா.. சம்சாரிக கடனைக் கட்டியிருக்கலாமே.
விலை நிர்ணயம் பண்ணாததாலே.. எங்க விளைச்சலெல்லாம் வியாபாரிக வீட்டுக்குள்ளே போய்ச் சேர்ந்து-