பக்கம்:காகித உறவு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காகித உறவு

17


"சரி. ஒரு அரை கிளாஸாவது ஊத்துடா..."

"இந்த ஊர்ல மூர்த்தி இருக்கற வரைக்கும், ஒரு சொட்டுக்கூட கிடையாது. மாரியாத்தா சத்தியமா. கிடையாது. ஆமாம் ராமு மச்சான். நீங்க... இங்க இருக்கறதுல. அர்த்தமில்ல."

ராமு மச்சான், வாசனை வீசும் பானையைப் பார்த்தார். வாடிக்கைக்காரர்களைப் பார்த்தார். ஒரு பயலாவது. குடிக்கச் சொல்றானா. இருக்கட்டும். இருக்கட்டும். கவனிக்கிற விதமா... கவனிச்சுக்கிறேன.

ராமு வுக்கு, குடித்தால் கூட, அவ்வளவு போதை இருந்திருக்காது. குடிக்காத போதை, முகத்தைச் சிவப்பாக்க, குடிக்க முடியாதநிலை, அவரை நிலை குலையச் செய்ய, "டேய் மூர்த்தி. ஒன்னை. என்ன பண்றேன் பாருடா" என்று உளறிக் கொண்டே வெளியேறினார்.

இரண்டே இரண்டு நாட்கள்தான்.

காளிமுத்து வெற்றிக் களிப்புடன், மாமூலான வாடிக்கைக்காரர்கள் வயிறார வாழ்த்த, தக்காரும் மிக்காருமின்றி, தொழிலை ஒஹோன்னு செய்து வருகிறான். விரைவில் காரும் வாங்கப் போகிறான்.

குடிக்க முடியாமல் போன கோபத்தில், வீட்டுக்கு திரும்பிய, மூர்த்தியின் தந்தையான ராமுவும், இதேபோல் திட்டமிட்டபடி வெளியூரில் குடிக்கக் கொடுக்காமல் திருப்பி அனுப்பப்பட்ட அவன் அண்ணனும், "ஊர்ல. ஆயிரம் நடக்கும். உனக்கென்னடா வந்தது? பெட்டிஷன் எழுதினியாக்கும். பெட்டிஷன். நம்ம குடும்ப கெளரவத்தைக் காற்றிலே விட்டுட்டியேடா... காவாலிப்பயலே" என்று செல்லிக்கொண்டு ஒருவர், பெட்டிஷன் எழுதிய மூர்த்தியின் கைகளைச் சாராயக்கிளாசைப் பிடிப்பது போல் பிடித்துக் கொள்ள, இன்னொருவர் அவனை அடிஅடியென்று அடித்து நொறுக்கினார். இதுநாள் வரைக்கும், தன்னை ஏடா என்று கூடக் கூப்பிடாத தந்தையும், தமையனும் இப்போது அடித்ததால் ஏற்பட்ட நெஞ்சுவலி பொறுக்க முடியாமல் எங்கேயோ ஒடிப்போய்விட்டான். அநேகமாக, சென்னையில் வசிக்கும் அக்காள் வீட்டில் தங்கி வேலை தேடிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

எப்படியோ, பல்லோர் அறிய, பகிரங்க ரகளிலியமாகக் காளிமுத்துவின் பானைக்குள், இப்போதும் சொர்க்க மழை பெய்து கொண்டிருக்கிறது! -


***

கா.2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/19&oldid=1383431" இலிருந்து மீள்விக்கப்பட்டது