பக்கம்:காகித உறவு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காகித உறவு

73



செல்லக்கிளி குளிக்கப்போனாள். குளித்தாள். உடம்போடு ஒட்டிக் கொண்டிருந்த பாவாடையைப் பிழிந்து விட்டுக் கொண்டு ஈர ஜாக்கெட்டோடு திரும்புவதற்கு அவளுக்குக் கொஞ்சம் வெட்கமாக இருந்தது. அதற்குள், “ஏ பொண்ணு... நாளைக்கு நல்லா குளிச்சிக்கலாம். சீக்கிரமாவா" என்ற பெரியம்மாவின் குரலைக் கேட்டு, கிட்டத்தட்ட ஒடினாள். ராத்திரிக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் இந்த மாதிரி சாப்பாடு இனிமேல் எப்போ கிடைக்கப் போவுதோ...?"

சாப்பிடக் கூப்பிடுவதாக நினைத்துப் போனால் அவர்கள் சாப்பிட்ட தட்டைக் கழுவச் சொன்னார்கள். செல்லக்கிளி ஜாடையாகப் பாத்திரத்தைப் பார்த்தாள். அதில் ஒர் பருக்கை கூட இல்லை. எங்கேயாவது எடுத்து வைத்திருப்பார்களோ iன்று கண்களைச் சுழல விட்டாள். வெங்காயத் தோல்களும் கறிவேப்பிலை இலைகளும் நைந்துபோன மிளகாய்களும் சூப்பிப் போடப்பட்ட முருங்கைக்காய் துண்டுகளும் கிடந்தன. ஏழு வயது பாப்பா மட்டும் "அவளுக்குச் சோறு போதுங்கோ" என்றது. உடனே கண்ணாடிக்காரர் வேலக்காரக் குட்டிக்கு வைக்கலியா" என்று கேட்டார். அவர் 'டோன்' பாப்பாவைச் சமாதானப் படுத்துவதற்காக மட்டுமே சொல்வதுபோல் ஒலித்தது.

பெரியம்மா மட்டும் சலிப்போடு சொன்னாள் :

"நல்ல பசி எல்லாம் காணாததைக் கண்டது மாதிரி சாப்புட்டுட்டுதுங்க இதே மாதிரி வீட்ல சாப்பிட்டா எவ்வளவு நல்ல இருக்கும்..?

"நான் சாப்பிடல, வசந்திதான் ஒரு பிடி பிடிச்சிட்டா..."

"ஏய் பொய் சொல்லாத. பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது."

எல்லோரும் வாய் விட்டுச் சிரித்தார்கள். செல்லக்கிளிக்கோ வாய்விட்டு, மனம்விட்டு, உடம்பெல்லாம் குலுங்கக் குலுங்க அழ வேண்டும் போலிருந்தது.

பட்டினியால் தவிக்கும் அம்மாவுக்கு.?'இப்பவே மூணு மணி இருக்கும். அவள் ஏகாங்கி மாதிரி மெல்ல நடந்தாள். ஒரு குவியல் உணவைத் தின்று கொண்டிருந்த சீமை நாய், அவள் தன்னோடு போட்டிக்கு வரப்போகிறாள் என்று பயந்தது மாதிரி 'லொள்' என்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காகித_உறவு.pdf/75&oldid=1383334" இலிருந்து மீள்விக்கப்பட்டது