பக்கம்:காக்கை விடு தூது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


தேர்வுநிலை மாற்றிச் சீறி யவர்வரவே
ஆர்வங் குறைந்தே அடங்கியும் — பார்மேல்
மதிப்பிழந்த விந்தமுதன் மந்திரியார் நெஞ்சங்
கொதிக்கும் வகைகொடுமை செய்ய — விதிர்ப்புற்றுக்
கண்ட துறவியருங் கன்றி மிளகியுளம்
விண்டு கடுஞ்சிறையில் மேவினார் — தொண்டர்கள்
பன்னூற் றுவரும் பகர்புலவ ருஞ்சிறையிற்
றுன்னி யழிந்து துளங்குகின்றார் — இந்நிலையில்
தாய்மார்க ளெல்லோரும் தத்தம் உளம்பொறார்
சேயோ டடைந்து சிறைபுக்கார் — தாய்மொழியிற்
காதல்மிகப் பெற்றதனாற் கன்னி யிளந்தமிழ்நன்
மாதர் மழலைக் குழவிகளோ — டோதுலகிற்
சிறைபெற்ற இந்நிலமை செந்தமிழர் என்போர்
அறியப் பெறார்இன் றறிந்தார் — மறைகற்றுப்
பஞ்சாங்கஞ் சொல்லிப் பொருள்பறிக்கும் பார்ப்பார்தம்
நெஞ்சங் கருங்கல்லோ நீள்மரமோ — வஞ்சகத்தில்
ஆக்கி யுருக்கும் அரமோ அருளதனைத்
தாக்குங் கொடிய தனிவாளோ — யார்க்கும்
உரைசெய்ய வொண்ணாதென் றொண்டமிழ ருள்ளங்
கருகி முனிந்து கனல்வர் — மருவியநற்
காக்கைப்பிள் ளாய்யாம் காயமுதன் மந்திரியைப்
பார்க்கப் பலரை அனுப்பினோம் — போக்குமவர்
தம்முரைகொள் ளாது தருக்கினிவர்ந் திட்டதனால்
செம்மைத் தமிழர் சிராப்பள்ளி — வெம்மைப்
படைகள் திரட்டிவந்து பைந்தமிழர் நற்போர்க்
கொடிக ளுயர்த்திக் குழாமாய் — நொடியதனில்
வாகை கொளவே வழிக்கொண்டார் ஆயினும்
ஓகை யுறவேதம் ஒன்னார்பாங் — கேக
விடுதூதொன் றேவி வினையியற்ற நின்றார்
ஒடியா வுளத்தின் குறுநீ — நெடிதுநினைந்
தெண்டிசைதேர்ந் தந்த இராசகோ பாலரை
அண்டி அவரை யணுகியே — “தொண்டீர்
பிறரடிமை போக்கப் பிறந்துழைத்தேன்" என்னுந்
திறல்பெற்ற தந்திரியே தேர்ந்த — மறையவரே