பக்கம்:காக்கை விடு தூது.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தமிழ்த் தாய் வாழ்க

சென்னை மாநில முதலமைச்சர்

ச. இராச கோபாலாச் சாரியாரவர்களிடத்து

வெண்கோழி யுய்த்த

காக்கை விடு தூது


[இத்தூது புறப்பொருள் பற்றிய தூதாகும். அண்டங்காக்கையென்பது காக்கையையன்றி இரட்டுறமொழிதலால் அரசனையுங் குறித்தபெயராகக் கருதப்படுதலால் அப்பெயருடைமை பற்றி இவண் தூது சென்றார் பறவையரசராய காக்கையார் எனக்கொள்க. அரசரிடத்துப் பார்ப்பார் தூது சேறல் பழைய வழக்காகவும் அதற்குமாறாக இற்றைஞான்று பார்ப்பாரிடத்து அரசர் தூதுசெல்லும் இன்றியமையாமை நேர்ந்ததென்பதனை இத்தூது கொண்டு தெளிக.]

வானுயரும் புள்ளாகி மாநிலத்தோர் அன்பு செயத்
தானமரும் நல்ல தனுப்படைத்து — மேன்மையாற்
பெற்றகரு மேனிகொடு பேருலகம் எங்கணும்
உற்றுயிர்கா வென்ற வுரையளித்து — வெற்றிகொண்
டெல்லார்க்குங் கோவாய் இருந்தமிழே பேசியுல
கெல்லாங் தமிழ்கூறும் ஏற்றத்தாற் — பல்லோருந்
தாமுண்ணு முன்னர்த் தனைநினைந்தவ் வின்னடிசில்
ஏம முடனேற்க என்றுரைக்கும் — சேமமுற்றுத்
தாமரையான் மாயன் தலைவரிவர் போற்றவுடன்