பக்கம்:காக்கை விடு தூது.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5



அரிதின் உலகம் அளிக்கும் - இருகண்கள்
உற்ற வுனக்கொருக னேயென் றுலகத்திற்
குற்ற முடையார் குறிப்பரால் - மற்றதுவும்
ஒப்பற்ற கண்ணுடையா ரென்றிடுமிவ் வுண்மையைச்
செப்பிடுவ தென்றறிஞர் செப்புவரால் - இப்புவியில்
மக்கள் தமைவருத்த வன்சனியோ டுற்றுறையும்
ஒக்க லெனவே யுனைப்பழிப்பர் - மிக்கவன்றான்
மாந்தர் தமைவருத்த வல்விரைந்து செல்லாமுன்
எந்தவன்றன் ஊர்தியாய் எய்தியே - தேர்ந்துனது
தந்திரத்தி னாலவனைத் தாறுமா றாயிழுக்கும்
இந்த விரகறிவார் யாவரோ - விந்தையுறக்
காலை யெழுந்து கரைந்து துயிலுமுயிர்
மாலை யகற்ற வருமணியே - சீலத்தால்
விந்த வுடலை விரும்பும் விரதியுயிர்
சார்ந்த வுடலூண் தவிர்தல்போல் - சேர்ந்தவுயிர்
மாண்ட வுடலை பயின்று வளர்ந்துலகில்
வேண்டு முயிரளிக்கும் மேதகையாய் - ஈண்டுன்
பெருமையெலாம் சாற்றப் பிறங்குயிரா லாமோ
உரிய துனக்கொன் றுரைப்பன் - இருநிலத்துக்
'கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே யெவ்வுயிர்க்கும்
முற்றோன்றி மூத்த குடி' நிலைத்துப் - பிற்றோன்றும்
பேரறிவுக் கெல்லாம் பிறப்பிடமாய் முன்னரே
சாரும் பெரிய தகவுடைத்தாய்ப் - பாரின்கண்
மக்களெலாந் தோற்றி மறைகுமரி கண்டந்தன்
தெற்கண் அமைந்த சிறப்பினைப்பெற் - றொற்கா
வடவெல்லை வேங்கடமா மன்னிய கீழெல்லை
தொடுகடலாத் தொன்றுமுதிர் பெளவம் - அடலரணாம்
மேலெல்லை யாக விரிந்தொளிருந் தென்னாட்டில்
சால்புங் குனனுந் தகப்பெற்ற - மேன்மக்கள்
இன்னுசெய் யாமை இயல்வ பரிந்தளித்தே
ஒன்னாரை யும்போற்றும் ஒட்பம்பெற் - றிந்நிலத்தில்
ஆதரவற் றிங்கண் அடையுமவர் தங்களைக்
காதலாற் போற்றுங் கருத்தினால் - ஓதுலகில்
எவ்வூரும் எம்மூரே யாவரும் எம்மவரே