பக்கம்:காக்கை விடு தூது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

செவ்விதிற் றெய்வமும் ஒன்றேகாண் — அவ்வப்
'பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யானென்னும் — மெய்யுரையைப்
பொன்னேபோற் போற்றவுடன் புத்துணர்வைத் தந்தொளிரும்
தன்னே ரிலாத் தமிழே தம்முயிரா — மன்னிய
வாழ்வி னுயர்வெல்லாம் வண்டமிழாற் றம்மிடம்
சூழ வருவ தெனச்சூழ்ந்தே — ஆழ்கடலிற்
போந்த பெருநாட்டைப் பொருட்படுத்தா திந்நிலத்திற்
றீந்தமிழே தத்தஞ் செவிமாந்தப் — போந்திருந்து
மூவேந்தர் போற்றவுயர் முச்சங்கப் பாலூட்டித்
தேவ ஏறியாத் திறமளித்து — மேவரும்
தாயெனவே போற்றுந் தனித்தமிழை முன்னாளிற்
றூய்மைபெறா ஆரியர்தாம் துன்னியே — வாயினால்
‘ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டிருந்தும் — சீரிய
நக்கீரர் தாமிலரால் நாமெதையுஞ் செய்வோமென்
றொக்க வுரைத்துரங்கொண் டாரியத்தின் — மிக்க
சிதைவுமொழி யாம்அம்பைச் சிந்தித் தமிழிற்
புதையம்பிற் புண்படுத்தி னார்கள் — அதுநிற்க
செந்தமிழ்சேர் சேலத் தினையடுத்த வூரின்கண்
முந்தையங் கார்தம் முதன்மரபில் — வந்தே
இராசகோ பால னெனும்பெயர்பெற் றியாரும்
பரவுமோர் ஆச்சாரியார்தாம் — இரவும்
பகலும் உழைத்தே படித்தாங் கிலத்தில்
தகவார் வழக்கறிஞ ராகி — மிகவும்
உலகமதில் இந்தியநா டிவ்வெள் ளையரால்
பலவும் இடுக்கட் படுமோர் — நிலையுணர்ந்தே
நெஞ்சமுளைந் தந்நிலைமை நீக்க நினைந்துளத்தே
அஞ்சாமை பூண்டோர் அறிவுரையை — எஞ்சாமல்
இந்தியருக் கெல்லாம் எடுத்துரைத்து வெள்ளையர்கள்
வந்த வழிபோம் வகையதுவே — சிந்திக்குந்
தன்னாட்சி மன்றத்தார் தம்முடனே கூடியதால்
தென்னாட்டுக் காந்தியெனச் செப்பப்பெற் — றிந்நாட்டில்
சாதி யுரங்கொள் தனிக்குடியில் தான்பிறந்தும்