உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஈடுபட்டு காரியமாற்றினார்கள்.

எங்களது தொகுதிக்கு மந்திரிகள் வரும்போது எங்களை அழைத்தார்களா? எங்களால் தோற்கடிக்கப் பட்டவர்கள் யாரோ அவர்களைக் காரிலே போட்டுக் கொண்டு அண்ணாதுரைக்கு ஓட்டுப்போட்டீர்களே வாய்க்கால் வந்ததா? ஏரி தூறு வாரப்பட்டதா ? சண்முகத்துக்கு ஓட்டுப் போட்டீர்களே சோறு கிடைத்ததா? கருணாநிதிக்கு ஓட்டுப் போட்டுக் கண்டபலன் என்ன? என்று கேட்டார்கள்.

காங்கிரசுக்கு ஓட்டுப் போடுங்கள். ஏரியைத் தூறு வாருகிறோம், கிணறு வெட்டித் தருகிறோம் என்றெல்லாம் பேசினார்கள். அதன் பலன் எங்களைத் தோற்கடித்தார்கள்.

நாங்கள் தோற்றதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. நான் எனது அறிக்கையிலே கடமைப் பணியைச் செய்திடுக! கவலையை மறந்திடுக ! நமது விடுதலைப் பயணம் தொடரப் பணி புரிமோம்.

நான் தோற்றதால், சட்டசபையிலே எனது குரல் ஒலிக்காமலில்லை. வெற்றி பெற்றவர்கள் உருவிலே எனது குரல் சட்டமன்றத்திலே ஒலிக்கும். நாம் வெளியே இருந்து அந்த பணியைச் செய்வோம்.

நமது நாவலரிடம் நான் முன்பே சொன்னேன், பொதுச் செயலாளர் பதவிக்கும் எம். எல். ஏ. பதவிக்கும் பொருத்தமில்லை என்று.

சென்றதேர்தலில் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக இருந்தார். தோற்றார். இப்போது நான் பொதுச் செயலாளராக இருக்கிறேன், தோற்கடிக்கப் பட்டேன். இனி யாரும் பொதுச் செயலாளர் பதவிக்கு வர அச்சப்படுவார்களோ என்னவோ?

கழகத் தோழர்கள் நமது தோல்வியை கணக்கிலெடுக்காது கடமைப் பணியைச் செய்யப் புறப்படுவார்களாக!


✽ முற்றும் ✽