6
போளூர் கேசவரெட்டியார் வட ஆற்காடு மாவட்ட ஆட்சி மன்றத் தலைவராக இருந்தவர்.
விழுப்புரம் சண்முகம் 3 ஆண்டுகளாக நகராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்.
ஆற்காடு முனிரத்தினம் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வருபவர்.
செங்கற்பட்டு, விசுவநாதம் நகராட்சி மன்ற உறுப்பினர்.
துரிஞ்சாபுரம் முருகையன் திருவண்ணாமலை நகராட்சியிலே உறுப்பினராக இருந்து வருபவர்.
விரிஞ்சாபுரம் சம்பங்கி நகராட்சி உறுப்பினராக பணியாற்றி வருபவர்.
திண்டிவனம் தங்கவேலு நகராட்சித் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.
தாம்பரம் முனுஆதி பஞ்சாயத்தை வெகுசிறப்பாக நடத்தி வருபவர்.
முத்துலிங்கம் வந்தவாசி நகரமன்ற உறுப்பினர். ஆடுதுறைத் தொகுதியிலே வெற்றி பெற்ற கோ. சி. மணி விவசாயப் பிரச்சினைகளைப் பற்றி நன்கு தெரிந்தவர். விவசாயிகளின் தலைவராக இருந்தவர். அவர் சட்ட மன்றம் செல்ல இருக்கிறார்.
திருச்சியிலே எம். எஸ். மணி ஆலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர்; ஆலைத் தொழிலாளர்கள் பிரச்னை பற்றிப் பேசுவார்.
லால்குடியிலே தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற அன்பில் தர்மலிங்கம் கிராமத் துறைகளிலேயும், விவசாயத் துறையிலும் அனுபவம் பெற்றவர்; வாதிடக்கூடியவர்.
பாராளு மன்றத்திற்கு செல்பவர்களில் தம்பி செழியன், மனோகரன், ராசாராம் பட்டம் பெற்றவர்கள்.
ஆக இவர்கள் மூலமாக நல்ல பணி நாட்டுக்கு கிடைக்கவிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.