உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காஞ்சிபுரத்து தேர்தல் ரகசியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

இவர்கள் எல்லாம் வந்தால் பெரிய கலவரம் நடக்கும் என்றும் பெரியஆபத்து விளையும் என்றும் எவரும் அஞ்ச வேண்டாம்.

நிச்சயமாக வெற்றி பெற்றுச் சட்ட மன்றத்திற்கும் செல்பவர்கள் பக்குவத்தோடு நடந்து கொள்வார்கள்.

பாராளுமன்ற முறைதவறாது பணியாற்றி வருவார்கள்.

ஆளும் கட்சி நல்லகாரியங்கள் செய்தால் ஆதரவு தருவார்கள்.

அநியாய வழிகளில் சென்றால் தடுத்து நிறுத்துவார்கள்.

நாங்கள் இல்லாததனால் கழகம் சோபை இழந்து விடும் என்றோ சோர்வு ஏற்பட்டுவிடும் என்றோ எண்ண வேண்டாம்.

சட்ட மன்றத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து, சனநாயகத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று உறுதி கூறுகிறேன்.

நாங்கள் சிலர் தோற்றதும், பலர் வெற்றி பெற்று வருகின்ற நிலைமையைக் கண்ட பத்திரிகைகள் சில தலையங்கங்கள் தீட்டி, தங்கள் கருத்துக்களை வெளியிட்டார்கள்.

குறிப்பாகவும் சிறப்பாகவும் 'இந்து' ஏடு நமது வெற்றி பற்றி தலையங்கம் எழுதிவிட்டு நான் பெங்களூர் சென்றிருந்தபோது என்னைச் சந்தித்து கழகம் எப்படி யெப்படி நடந்துகொள்ளப் போகிறது என்று கேட்டது.

முதலமைச்சர் காமராசரும், பெரியார் ராமசாமி அவர்களும் எங்கே நான் நுழைந்துவிடுவேனோ என்று சட்ட மன்றக் கதவையே தாளிட்டு விட்டதாகக் கருதிக்கொண்டு மீண்டும் சட்டசபைக்கு செல்லும் நோக்கம் உண்டா என்று கேட்கிறார்கள்.

நான் அவர்களுக்குச் சொல்லுவேன், நான் விரும்பினால் நிச்சயம் நுழைந்துவிடுவேன்; ஆனால் நான்