பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபிகையின் நயப்பகுதிகள் 121 ஆசிரியர் விளையாட்டும் விளையாடுவதை நாம் காணத்தான் செய்கின்றோம். கற்பனை யாற்றலால் ஊஞ்சல் கப்பலாக மாறிவிடுகின்றது மரக்கட்டை குதிரையாகி விடுகின்றது உயிரில்லாதவை உயிருள்ளவையாகி விடுகின்றன: பேசுகின்றன. கடை வைப்பதிலும் பள்ளிக்கூடம் வைப்பதிலும் பாலர்கட்கு அதிக ஆசை என்பதை நாம் அடிக்கடிக் காண்கின்றோம். சிறுவன் ஒருவன் மண்ணில் சில கோடுகளை வரைந்தான்; இதோ திருக்கோயில் என்றான். இன்னொரு சிறுவன் வேறு இரண்டொரு கோடுகளைக் கீறி இதோ பெரிய திருமண்டபம் என்றான். இந்த இடத்தை நெருங்கி வந்து கொண்டிருந்த இராமாநுசரைக் கண்டதும் பிறிதொரு சிறுவன் மேலும் இரண்டொரு கோடுகளைக் கிழித்து 'ஜீயரே, இதோ உம்முடைய பெருமாள்' என்று காட்டினான். இராமாநுசர் வந்து பார்த்தார். மற்றொரு சிறுவன் அதோ பெருமாளின் திருவாழி, திருச்சங்கு என்று சுட்டிக் காட்டினான். உடனே இராமாநுசர், தமர்உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே என்று சொல்லிக் கொண்டே, அந்தச் சிறுவரின் கீறல்களை நோக்கித் தண்டனிட்டார். இவரது திருவுள்ளம் அந்தக் கீறல்களை உண்மையாகவே எம்பெருமானின் திருமேனியாகவே கருதி பிரபத்தி பண்ணிவிட்டது. தமர்உகந்தது எப்பேர் மற்று அப்பேர் அருகிலிருந்த இன்னொரு சிறுவன் ஒரு கொட்டாங்கச்சியில் மண்ணை வாரி வைத்துக் கொண்டு சந்நிதியில் அருளிப்பாடுகள் சொல்லுகின்ற மாதிரியே 9. காக்கைகள் கூட்டமாக இருப்பதைப் பார்த்து சிறுவன் ஒருவன் காக்கா பள்ளிக் கூடம் வைத்திருக்கிறது என்பான் - இதைப் போல.