பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் படியான பிரபந்தமாய்த்து". திருவாய்மொழி விரோதிகள் அழிவதற்குக் காரணம் என்பதற்கு இது சம்வாதம். இதனை விவரிப்போம்: அவ்யபதேஷ்யன் என்றது கிருமிகண்டசோழன் இவன் பதினோராம் நூற்றாண்டில் (கி.பி.1070-1116) இருந்த முதற்குலோத்துங்கன் என்பர். இவன் தத்துவ ஞானிகளான பெரியநம்பி, கூரத்தாழ்வான் என்னும் பெரியார்கள் இருவருடைய திருக்கண்கள். போவதற்குக் காரணமாக இருந்த பெரும்பாதகன். ஆதலால் அவன் பெயரைச் சொல்லுவதற்கும் வாய்வராமல் அவ்யபதேஷயன் என்கின்றார். அவத்தம்புன் சமயச்சொல் பொய்யை மெய்என்று அணிமிடறு புழுத்தான்தன் அவையின் மேவி சிவத்துக்கு மேல்பதக்கு உண்டென்று தீட்டும் திரிக்கூர வேதியார்கோன் செவ்வி பாடப் பவத்துக்குப் பிணிநீங்க நரகம் தூரப் பரமபதம் குடிமலியப் பள்ளி கொள்ளும் நவத்துப்புச் செங்கனிவாய்க் கரிய மானி நம்பெருமாள் அரங்கேசர் ஆடீர் ஊசல்,' என்கின்றார் திவ்வியகவியும். கிருமி கண்டனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவன் அவன் மகன் விக்கிரமசோழன். இவன் காலம் கி.பி.11161 4 34 தகப்பன் செய்தது திருக்கண்ணபுரத்தின் திருமதில்களை இடித்துத் தள்ளியது. இது வைணவ தரிசனத்திற்குச் செய்த விரோதமான செயல். தமப்பன் பெருமாள் கோயிலை இடித்துப் போட்டான் என்று கேள்வியுற்று, ஐயோ! ஒரு கோயிலை இடித்துப் போட்டதனால் என்னாகும்? இதனால் தர்சனம் குலைந்ததாகுமா? திருவாய் மொழியும் ரீராமாயணமும் 15. சீரங்கநாயகர் ஊசல் - 20