பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் சம்பந்தம் பெற்ற பொருள்களையும் எம்பெருமானுக்குப் போலியான பொருள்களையும் கண்டு அப் பெருமானையே கண்டதாகக்கொண்டு களித்தலே பரம வைணவத்துமாகும். இந்நிலைமையே இத்திருவாய்மொழியில் உண்டாகிறது. இதற்கு முன்னைய திருவாய்மொழியில் (4.3) ஆழ்வார் தாமான தன்மையிலிருந்து கொண்டே எம்பெருமானுடைய காதல் குணத்தை அநுசந்தித்தார்; ஏன்? பெரிய திருவந்தாதியிலும், பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவிமலர் என்றும் காண்தோறும், - பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான்வுருவே என்று (73) என்று போலிப்பொருள்களைக் கண்டு பூரிப்பு அடைந்த வரல்லவா? ஆகவே, இத் திருவாய்மொழியில் பிச்சேறி நிற்கின்றார். இத் திருவாய்மொழிக்கு அவதாரிகை அமைத்த நம்பிள்ளை கூறுவார் : சென்ற திருவாய்மொழியில் பிறந்த நிரவதிகப் பிரீதியானது இவரது சொரூபமும் அழியும் படியாக இருந்தது. இந்த நிலைமையைக் கண்ட எம்பெருமான் அந்த ரசத்தை அரையாறுபடுத்திப் பொறுக்கும்படி செய்கைக்காக அந்தக் கலவியைச் சிறிது குறைத்து நின்றான்; இதனால் ஆழ்வாருடைய ஆற்றாமை மீதுர்ந்தது. பணமுடிப்பைப் போக்கடித்தான் ஒருவன் அதோடு போலியான முடிப்புகள் எல்லாவற்றையும் அவிழ்த்து அவிழ்த்துப் பார்க்குமாப் போலவே அவனோ டொத்த பொருள்களையும் அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களையும் எல்லாம் அவனாகக் கருதி மயங்கிக் கிட்டிப்பார்த்துப் பிச்சேறுகிறபடியாக நடைபெறுகிறது இத்திருவாய்மொழி. வைப்பாம் மருந்தாம் (1.7:2) என்று சொல்லும்படி இவர்க்குச் சேமநிதி அன்றோ அவன்?