பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 181 ஒன்றைச் செய்தமாயமே கள்வம் என்பதாக எம்பெருமானார் (இராமாநுசர்) நிர்வகிப்பர். முன்னன் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன் (பெரிதிரு.9.4:2) என்ற பரகாலநாயகி(திருமங்கையாழ்வார்) வாக்கும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. 'ஒருத்தி மதியெலாம் உள்கலங்கி மயங்குமால்' என்ற செய்தியைக் கூறிவருமாறு பணிக்கின்றாள். ஒருத்தி' என்றால் தெரியுமோ? இன்னாள் என்று குறிப்பிட வேண்டாவோ? என்னில், வேண்டா, ஒருத்தி என்றபோதே அவள் பராங்குச நாயகி என்று அறிந்து கொள்வான். இங்ங்ணம் மதியெல்லாம் உள்கலங்கி மயங்கும் படியாகத் தன்னால் செய்து வைக்கப் பெற்றவள் இந்நிலத்தில் பராங்குச நாயகி ஒருத்தி தவிர, வேறுயாரும் இல்லையாதலால் சிறப்பித்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே நம்பிள்ளை ஈடு: "ஒருத்தி என்றால் அறியுமோ? என்னில், எய்தவன் கை உணராதோ? இன்ன காட்டில் மான் பெடை ஏவுடனே கிடந்து உழையா நின்றதென்று ஊரிலே வார்த்தையாடினால் எய்தவன் கை உணராதோ? நீயன்றோ எய்தாய்?" எனச் சொல்ல வேண்டாவிறே" என்பதாகும். பாசுரத்தின் இறுதி அடியின் நயத்தையும் கண்டு மகிழவேண்டும் "ஒருத்தி அறிவு கலங்கினாள்" என்று கூறுங்கள் அது கேட்ட எம்பெருமான் 'தன்னதான அறிவு கலங்கப் பெற்றாலும், நாம் கொடுத்த அறிவு இருக்குமே, அது கொண்டு ஆறியிருப்பள்' என்பன்; அப்போது 'மதியெலாம் கலங்கிற்று' என்று கூறுங்கள். அதுகேட்ட