பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள்



எழுதும் அளவுக்குத் திறமை பெற்றிருந்தார். பிராமணப் பட்டு அரங்காசாரிய சுவாமி என்பவர் நம் சுவாமிகட்கு வித்வான்கள் பாராட்டை நம் சுவாமி பெற வேண்டும் என்று விரும்பினார்கள். ஒரு சமயம் நம் சுவாமி தம் பெற்றோர்களுடன் திருப்பதி சென்றிருந்தபொழுது அங்கு பிராமணப் பட்டு சுவாமி வித்வான்களின் அவையைக் கூட்டி அவர்கட்குமுன் நம் சுவாமியை அறிமுகப்படுத்தி அவருடைய கட்டுரைகள் சிலவற்றைப் படிக்க வாய்ப்பளித்தார். கூடியிருந்த வித்வான்கள், குறிப்பாக புரிசை அரங்காசாரிய சுவாமி முதலானோர் நம் சுவாமியின் அகவைக்கு மீறின மதிநுட்பத்தைக் கண்டு மகிழ்ந்து மங்களாசாசனமும் சன்மானமும் செய்து பாராட்டினார்கள்.


அறிவு அற்றம்காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்அழிக்கல் ஆகா அரண் (421)8