பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 



3.திருமண வாழ்க்கையும்

மேற்கல்வியும் பிறவும்



அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (45)1

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றஅனைத்து ஊறும் அறிவு (396)2

இந்த இயலில் நம் சுவாமியின் மேற்கல்விபற்றியும் அவர்தம் திருமண வாழ்க்கைப் பற்றியும் விளக்குவோம். சுவாமிக்குக் கலைமகளின் திருவருள் இளமையிலிருந்தே வெள்ளம் கோத்து அவர்மீது பாய்ந்தது. புருஷகார பூதையாகிய பெரிய பிராட்டியாரின் பேரருளும் அவர்மூலம் எம்பெருமானின் பேரருளும் நம் சுவாமி பெற்றார். நம் சுவாமியின் பிராரப்தம் (நுகர்வினை) காரணமாக அனைத்தும் சுமுகமாகவே செயற்பட்டன. காஞ்சி தேவப்பெருமாளின் கடைக்கண் நோக்கும் இவர்மீது பாய்ந்தது.

காதிசுவாமியின் தொடர்பு : புஷ்கம் ஆத்ய அனந்தாசாரியரின் பேரருடைய குமாரர் ஜகத் குருகாதி அனந்தாரியர் ஒரு புகழ் மிக்க வித்வான். தொடக்கக் காலத்தில் இவர் நம் சுவாமியின் திருத்தந்தையாரிடம் சில ஆண்டுகள் கல்வி பயின்றார். இவருக்குச் சீடர் குழாமும் அதிகம். பலமுறை இவர் வடநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு விசிட்டாத்வைதத்தைப் பரப்பிய பெருமகனார். மும்பையிலும் திருவேங்கடமுடையானுக்கு ஒரு

 

1. திருக்குறள் - இல்வாழ்க்கை - 5

2. மேலது - கல்வி - 6.