பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் இந்நூலாசிரியரின் தொடர்பு : சுவாமியுடன் அடியேன் கொண்ட தொடர்பு ஏழுமலையான் திருவருளால் ஏற்பட்டது என்பதை இன்றளவும் பக்தியுடன் அடிக்கடி நினைவுகூர்வது வழக்கம். இதற்குப் புருஷகாரமாகச் செயற்பட்டவர் புலவர் திரு. சீநிவாச வரதன் (திரு வேங்கடவன் பல்கலைக் கழகக் கீழ்த்திசை ஆய்வுத் துறையில் பணி யாற்றி வந்தவர்) என்ற என் கெழுதகை நண்பர். தமிழகத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக டாக்டர் பட்ட ஆய்வுக்கு இசைவு கோரி முயன்றும் கிடைக்காத இசைவு திருவேங்கடவன் அருளால் டாக்டர் கோவிந்த ராஜூலு நாயுடு அவர்கள் (துணைவேந்தர்) வழங்கினார். 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வாரின் சமயம், தத்துவம், என்ற பொருளை தேர்ந்தெடுத்து ஆய்ந்து கொண்டிருப்பதை என் நண்பர் கண்டார். திரு. பு.ரா.புருடோத்தம நாயுடுவின் "ஈட்டின் தமிழாக்கம்' பகுதி பகுதியாக வெளிவந்து கொண்டிருந்த காலம். என் நண்பர் நாலாயிரம் முழுமைக்கும் திருவாய் மொழிக்கும் வியாக்கியானம் 'திவ்வியார்த்திக தீபிகை கிடைக்கும் என்று கூறினார். என் வேண்டுகோளின்படி காஞ்சியிலிருந்து தீபிகை அனைத்தும் வாங்கி வந்து உதவினார் (1960). * அவற்றில் ஆழங்கால்பட்டு நிறைந்த பயனை அடைந்தேன். 13. இந்த ஆய்வின் அடிப்படையில் 108 திவ்விய தேசங்களையும் சேவிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்பால் எழுந்தது. நண்பர் துணைக் கொண்டு தொண்டைநாட்டுத்திருத்தலப் பயணத்தின் முதல் சுற்று தொடங்கியது. காஞ்சியில் உள்ள தலங்கள், காஞ்சிக்குப் புறத்தேயுள்ள திருப்புட்குழி திருவிட எந்தை, திருநீர்மலைவரை திவ்விய தேசங்களைச் சேவிக்கவும், அவற்றை அருகிலிருந்து விளக்கவும் துணை செய்தார். அவர் இப்போது அமரர் நான் திருப்பதியிலிருந்தபோதே திருநாடு அலங்கரித்து விட்டார். அவருடைய திருக்குமாரன் அமெரிக்காவில் திருமால் ஆலயம் ஒன்றில் பணியாற்றி வருகிறான். என் அமெரிக்கப் பயணத்தின் போது (2002 -மார்ச் 30 - 2002 ஜூன் 20) திருமால் தலங்களைச்சேவிக்கும்போது அப்பையனைப்பார்க்கமுடியவில்லை. அங்கு ஒருவராலும்அவனைப்பற்றிச்சரியானதகவல்தர இயலவில்லை.