பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் (2) திவ்வியப்பிரபந்தப் பேராசிரியர் : இவர்தம் பேச்சும் மூச்சும் ஆழ்வார்களின் அருளிச் செயல்களே என்பதற்கு இவர்தம் வாழ்நாள் முழுவதும் இவர் மேற் கொண்ட பிரபந்தம்பற்றிய சொற்பொழிவுகளும் பிரபந்த உரைகளுமே சான்றுகளாக அமைகின்றன. இவற்றைக் கண்டு வியந்த இராமநாதபுரசேது சமஸ்தான வித்துவான் பேராசிரியர் இராகவையங்கார் சுவாமி இவ்விருது இவருக்குத் தகும் என்று வியந்து பாராட்டிப் பேசியதும் பெரிய சான்றாகத் திகழ்கின்றது. (3) செந்தமிழ்ச் செல்வர்: தமிழ் இலக்கிய இலக்கியங் களைக் கற்றுத் துறை போய வித்தகராகத் திகழ்ந்து கவிபாடும் திறனையும் கண்ட மதுரைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவந்த செந்தமிழ் பத்திரிகை ஆசிரியர் திரு நாராயண ஐயங்கார் சுவாமி இவ்விருதைச் சுவாமிக்குச் சூட்டி மகிழ்ந்தார். (4) மகா வித்துவான் : வைணவ உலகில்"வித்துவான்' என்று பெயர் பெற்ற ஒவ்வொருவரும் சுவாமியின் நூல்களைப் பயின்று தெளிவு பெறுவதால், வித்வான்களுக் கெல்லாம் வித்வானாகத் திகழும் சுவாமியை ‘மகா வித்வான் என்று பல வித்வான்கள் மதித்து இவ்வாறு அழைத்து வந்தமையால் இப்பட்டம் தானாக இவரை ஒட்டிக் கொண்டு தானும் பெருமை பெறுகின்றது. (5) பிரதிவாதி பயங்கரர் : இது இவர்தம் குடிப் பெயராக அமைந்த ஒன்று என்றாலும் இவருக்கே இவர்தம் வாதமிடும் திறமையால் உண்மையான பட்டமாக அமைந்து விட்டது. சுவாமி இருபது அகவை முதற் கொண்டே பிரதிவாதிகளுக்கு உண்மையிலேயே பயத்தை விளைவித்த பெருமானாகத் திகழ்ந்தமையால் இப்பட்டமாக நிலைத்து விட்டது என்பதை எவரும் அறிவர்.