பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 காஞ்சி பி.ப. அண்ணா சுவாமிகள் நேரில் சேவித்தவர்கள் வியக்கிறார்கள். காலாட்சேபங் களைக் கேட்டவர்கள் ஆச்சரியப்படுகின்றார்கள். இப்படிப் பட்ட மகானை எம்பெருமான் எப்படித் தோற்றுவித்தான்! அவனே அவதரித்தானோ இல்லை... ஆழ்வார்களுள் ஒருவரோ எம்பெருமானாரோ விசதவாக் சிகாமணியான ம ன வ | ள மாமு னி களோ ! இன்னா ரென்றறியோ ம் என்கிறார்கள். இவரார் கொல்? ● é & 娜 总 第 治 期 8 神岭》经 蛤 学 始 蛤 命 锣始 娜 艘 即 够 பொய்யையே மெய்ம்மையாகச் சொல்லித் திரியும் அபார்த்தவாதிகளின் வாதங்களை நிரசிக்கக் கையில் எழுதுகோல் எடுத்த நம் சுவாமி இறுதிவரை அதைக் கீழே வைக்கவில்லை. உருவின வாளை உறையிலிடவில்லை.

  • * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மணவாளமாமுனிகள் மிகவும் சாகத சுபாவ முடையவர். விசதவாக் சிகாமணி, ஆசாரிய இலட்சணங்கள் நிரம்பி, அரங்கனும் வரிக்கத்தக்க ஆசாரியராக விளங்கினார். மணவாளமாமுனிகளால் பகவத்விஷயம் பிரசாரம் ஆயிற்று ஆகவே வைணவ உலகம் அவரை 'இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் என்று வாழ்த்தியது.! நம் சுவாமியும் சார்ந்த சமதமாதி குணங்களைக் கொண்டவர்; கல்விக்கடல் அழகிய சொற்களைக் கூறுபவர். ஆசாரிய இலட்சணங்கள் நிரம்பி ஜகதாசாரியர்' என்ற பெருமையோடு குறிக்கப் பெறுகிறவர். பகவத் விஷயத்தைப் பலமுறை நூல்களாகப் பதிப்பித்தும் காலட்சேபங்களைச் சாதித்தும் எம்பெருமானின் பரிபூர்ண கிருபையைப் பெற்றவர். பூரீவைணவம் தழைத்தோங்க மணவாளமாமுனிகளை வைணவ உலகம் பிரார்த்தித்ததுபோலவே நாமும் அண்ணா சுவாமி இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்' என்று கீதாசாரியன் திருவடிகளில் பிரார்த்திக்கின்றோம்."