பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்தும் - மறையாத சோதி 45 (3) பூரீந்ருலிம்ஹப்ரியா : தென்னாசார்ய சம்பிரதாய ஜோதி மறைந்தது. காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய சுவாமி புகழ்மிக்க பூரீ வைஷ்ணவர்களில் ஒருவர். ரீ ராமாநுஜ சித்தாந்தத்திற்கு அரும்பாடு பட்டுள்ளார். உபந்யாசம் செய்ய ஆரம்பித்தால் சுருதி, ஸ்ருதி இதிகாச புராணங்கள், ஆழ்வார் ஆசாரியர்களின் பூரீ சூக்திகள் எல்லாவற்றையும் கடல் மடை திறந்தாற் போல் தட்டுத் தடங்கலின்றி உபகரிப்பார். இத்தகைய ஜோதி மறைந்து விட்டது. இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். (4) பூரீரங்கநாதபாதுகா : பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய சுவாமி திருநாடலங்கரித்தது நம் தர்சனத்துக்குப் பேரிழப்பாகும். (5) சப்தகிரி : பல துறைகளிலும் உயர்ந்தவர், பலமொழிகளிலும் தெளிந்தவர், பெரியோர்கள் பலரின் ஆற்றல்கள் பலவற்றையும் ஒருங்கே பெற்றவர். கலைகள் பலவும் கைவரப் பெற்றவர் எனப்படும் ஒருவரைக் காண்டல் அரிது. அவர்தாம் அவனி யெல்லாம் கொண்டாடும் அருங்கலை விநோதர் அண்ணங்கராசாரிய சுவாமிகள். இத்தகைய ஆற்றலும் சிறப்பும் பெருமையும் கொண்டு திகழ்ந்த அன்னாரின் மறைவு வைணவ உலகத்திற்கு மட்டுமல்ல; சமய உலகிற்கும் பாரத மண்ணிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். சுடரொளி பேரொளியானது. - ஆ. சீதாராமன், காஞ்சிபுரம். (6) ஆனந்த விகடன் : அண்மையில் தனது 93-வது வயதில் மறைந்த பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசார்ய சுவாமிகள் இந்த நூற்றாண்டு கண்ட அதிசய மனிதர்களில்