VI
Dr. V.K.N.S. Raghavan University of Madras
Professor and Head Chepauk, Triplicane,
Dept. of Vaishanavism Chennai - 600 005.
அணிந்துரை
“தங்கக்காப்பு அண்ணா” என்று புகழ்மிக்க ஸ்ரீ உ.வே. காஞ்சி பி.ப அண்ணங்கராசாரிய சுவாமிகள் எனும் இனிய நூல் பேராசிரியர். டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்களால் மிகநேர்த்தியாகவும், திறம்படவும் இயற்றப்பட்டுள்ளது. ஆதலின் இதற்கு அணிந்துரை என்பதே இன்றியமையாததல்ல. இருப்பினும் மேன்மைமிகு பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அடியேன் சிறிய ஞானத்தன் சில மேற்கோள்களைத் தெரிவித்து அமைய விழைகிறேன்.
தென்னாசார்ய லம்ப்ரதாய ஜோதி காஞ்சி பி.ப. அண்ணா ஸ்வாமி. . . ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்தத்திற்கு அரும்பாடுபட்டவர், உபந்யாஸம் செய்கையில்... ச்ருதி, ஸ்ம்ருதி, இதிகாசம், புராணங்கள், ஆழ்வார் - ஆசார்யர் ஸ்ரீ ஸூக்திகள் எல்லாவற்றையும் கடல்மடை திறந்தாற்போல் தட்டுத்தடங்கலின்றி மேற்கோள் காட்டுவார்.
“ஆணல்லன், பெண்ணல்லன்”, (திருவாய் 2.5:10) விளக்கத்தில் - "...பரப்பிரம்மம் சூனியப்பொருள் என்று சொல்வது ஆழ்வாருக்கு உடன்பாடாகில் சொல்லிலக்கணத்திற்குப் பொருத்தமாக அவர் அருளிச் செய்திருப்பார். அங்ஙனமின்றி ஆண்பாலுக்குரிய 'அன்'