VII
விகுதியையிட்டு அருளிச்செய்திருக்கையாலே எம்பெருமான் சாதாரணபுருஷன் அல்லன், புருஷோத்தமன் என்று தெரிவிக்கப்பட்ட தாகாதோ? என்று அருளிச்செய்தார் ஒரே சாதியிலுள்ள மற்றைய பொருள்கள் இவற்றினின்றும் விலக்கிக் காட்டியது உளங்கொள்ளத் தக்கதாகும்.
உபவே. காஞ்சி மஹாவித்துவான் பி.ப. அண்ணா ஸ்வாமிகள்,
“அத்யாத்மக்ரந்தநிர்மாணம், அந்யேஷாம் ச அவபோதநம்
அர்ச்சாவதார - ஸேவாச...”
என்ற சுலோகத்திற்கிணங்க ஸ்ரீவைஷ்ணவ ஆன்மிக நெறிப் பாதுகாவலராக விளங்கியவர் என்பதை, பேராசிரியர் மிக உன்னதமான சான்றுகளுடன் விளக்கிக்காட்டியுள்ள பாங்கு அனைத்துத் தமிழ் வல்லுநர்களாலும் பாராட்டத் தக்கதேயாம்.
ஆகவே இந்நூல் அனைத்து வைணவர்களாலும், மற்றும் தமிழர்களாலும் படித்துப்படித்து, சுவைத்துச் சுவைத்து இன்புறத்தக்கது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. மற்றும் அனைத்து நூலகங்களையும் அலங்கரிக்கத்தக்கது இந்நூல் என்பது மிகையாகாது.
சென்னை - 5 - ஸ்ரீவைஷ்ணவதாஸன்
31.10.2004. வ.கி.ஸ.ந. இராகவன்
(VKNS. Raghavan)