பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

காஞ்சி வாழ்க்கை


கிறேன் என்றும் எனக்கு அப்பட்டம் எவ்வாற்றானும் தேவை இல்லை என்றும் கூறினேன். அவர்கள் ஏற்குமாறு வற்புறுத்தினர். நான் வேண்டாமென்றும் மீறித் தரப்பெறுமாயின் ஏற்றுக்கொள்ளாமல் மறுக்கப்பெறும் என்றும் மேலும் எக்கூட்டத்துக்கும் தொடர்ந்து வரமாட்டேன் என்றும் சொன்னேன். அவ்வாறு அப்பட்டத்தைத் திருப்பித்தரின் அதைக் கவுரவக் குறைவாக அன்றைய ஆங்கில அரசாங்கம் எண்ணிற்று. பிற்காலத்தில் பலர் அப்பட்டங்களை உதறித் தள்ளினர். சிலர் இன்றும் அந்த அடிமைச் சின்னங்களை அணிந்து கொண்டு பெருமைப்படுகின்றனர். நான் அன்று மறுப்பேன் என்று கூறிய ஒன்றை நன்கு உணர்ந்த செட்டூர் அவர்கள் என் பெயரை அரசாங்கத்துக்கு அனுப்பவில்லை என்று உறுதி அளித்தார். மிக்க மகிழ்ச்சியோடு நான் காஞ்சிபுரம் திரும்பி நேரே தாசில்தார் வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறினேன். அவர் உரிமையோடு என்னைக் கடிந்து கொண்டார். எனினும் அது பற்றி மேலே அவர் ஒன்றும் பேசவில்லை. இதை அறிந்த என் நண்பர்கள் புலர் பின்னால் என்னைக் கடிந்து கொண்டார்கள். நான் எதற்கும் செவி கொடாது எப்போதும் போல அன்னைத் தமிழுக்கும் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் என்னால் ஆன பணிகளைச் செய்து கொண்டு காலம் கழித்துவந்தேன்.

போருக்கு இடையில் நாட்டில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அண்ணல் காந்தி அடிகளார் இந்திய நாட்டை நேரடியாகப் போரில் ஈர்ப்பது ஆங்கில ஆட்சிக்குப் பொருந்தியது ஆகாது என விளக்கினர். அவர்கள் இவர் தம் பேச் சினைக் கேட்கவே இல்லை. காங்கிரஸ் மாகாசபை பல வகையில் மாற்றுச் செயலாற்ற முற்பட்டது. அதனால் சில தலைவர்கள் சிறையில் தள்ளப்பெற்றனர். நாடு முழுவதும் கொந் தளிப்பு ஏற்பட்டது. மாநில மத்திய அரசாங்கச் சட்டசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் மாவட்ட நகர் மன்றச் கழகங்களும் எதிர்ப்புக் காட்டும் முகத்தால் உடனே ‘இராஜி நாமா’ செய்து வெளியேற வேண்டுமென்றும் திட்டம் தீட்-