பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

காஞ்சி வாழ்க்கை


இருப்பதறிந்து ‘நீக்க வழியில்லையா ?’ என நெடிது நினைந்து நைந்த நாட்கள் பல.

நான் காஞ்சியில் சேர்ந்தபோது பள்ளிப் பொறுப்போடு கிறித்து பெருமான் அன்புச் சமயப் பணிகளையும் ஏற்று இருந்தவர் ‘மக்ளின்’ என்னும் துரைமகனார் ஆவர். அவரும் அவர்தம் துணைவியாரும்-மக்கள் இல்லை என நினைப்பு-இராப்பகல் அற்ற நிலையில் தம் சமயம் வளர்க்கப் பாடுபட்டனர். காஞ்சி விழவறாகக் காஞ்சி அல்லவா ! ஆகவே எப்போதும் ஏதேனும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்ட இருக்கும். சில வேளைகளில் இலட்சக்கணக்கான மக்கள் கூடுவர். பல வேளைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வருவர். அனைவரும் சைவ வைணவ சமயத்தவர் களே. அவர்களுக்கு இடையில் இந்த ‘மக்ளின்’ தம்பதிகள் தம் சமயப் பிரசாரத்தைச் செய்வர்; துண்டுப் பிரசுரங்கள் வழங்குவர்; விவலிய நூல்களைத் தருவர்.

எளிய முறையில் நடுத்தெருவில் நின்று அவர்கள் சமயப் பணியைச் செய்துகொண்டிருப்பர். அவர்தம் பொறுமைக்கு எல்லைகாண முயன்ற சில நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. ஆயினும் அவர்கள் உளம் கலங்காது ‘கர்த்தர்’ தொண்டினைச் செம்மையாகச் செய்துவந்தனர். சிலமுறை அவர் தரும் தாள்களையும் நூல்களையும் கிழித்து அவர் தலையிலேயே போடுவார்கள். அவர் புன்சிரிப்போடு அதை ஏற்றுக்கொள்வார். சில வேளைகளில் தண்ணிரைக் குடம் குடமாக அவர் தலையில் ஊற்றுவர்; அதனால் அவர் பணியில் தளர்ச்சி அடைந்தது கிடையாது. ஒருமுறை ‘சாணி’யைக் கரைத்து அவர் தலையில் ஊற்றினர். அவர் வாய் ‘இயேசுவே, அவர்கள் அறியாது செய்யும் பிழைகளை மன்னியும்’ என்று வேண்டிற்று. இவ்வாறு அவர்தம் அன்புப் பணி இனிது நடைபெற்றது. நான் அவருடன் சில நாட்கள் பேசுவதுண்டு. ஒருசிலவற்றில் மாறுபட்டாலும் எல்லாச் சமய அடிப்படை உண்மைகளும் ஒன்றே என்பதை அவர்