பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

காஞ்சி வாழ்க்கை


புள்ளிரியுஞ் சோலையிலும் பூங்கமல வாவியிலும்
உள்ளும் உயர்ந்திடுசெந் நெல்வயலும்–விள்ளரிய

இன்பம் நிறைத்து இனிமை நலங்காணத்
துன்பம் அகலத் துயர் நீக்கி–மன்பதைகள்

வாழ்வுபெற்றோம் யாமென்று வாழ்த்திப் பணிந்தேத்தும்
சூழ்புவியைக் காத்திடுநற் றூ நீரே!–ஏழ்கடலும்

வற்றி மழையாக வந்து உலகமெலாம்
சுற்றிப் பெருவெள்ளம் தோற்றுவிப்பாய்-முற்றறிஞர்

‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை’யே-அடுத்துரைத்த

சொல்லேமெய் யாமென்னத் தொல்லுலகில் நீர்வளமும்
நல்ல பயிருமுடன் நாட்டுவித்து-மல்லல்

வளமுற்ற நாடதனை வந்து பெரு வெள்ளமென
அளவற் றழித்தகன்று ஆழ்த்தி–குளமெல்லாம்

அன்னம் புகலிடமாய் ஆக்குவித்து எவ்விடத்தும்
கின்னங் களையுங் கிளர்மழையே!–உன்பெருமை

நன்றாய்ந் தறிந்து நலமுரைத்தார் வள்ளுவனார்
ஒன்றாலே யல்ல ஒருபத்தால்–பொன்றாத

‘நீரின் றமையா தூலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்’கென்ற–சீரியதோர்

இன்பங் கனிந்த எழில்பெறு நற் சொல்லாலே
வன்பின் செயலகற்றி வாழ்த்துபெற்றாய்!-உன்புகழை

ஓதற் குரித்தாமோ ஓங்கிவரு நற்புனலே
சீதத் தினிமைதருந் தெண்ணீரே!–போதமிகு

தண்டமிழ்சேர் நற்குடகு தன்னில் உதித்தபெரு

மண்டலம் தான்புகழ்மா காவேரி–கண்டிடுவோர்