பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளம் விடு தூது

11


உந்தன்வெள் ளப்பெருக்கை ஓர்ந்து மகிழ்வாரே
கந்தன் றனை ஒரு நாள் கைத்தலத்தால்–உந்திய நற்

பொற்சரவ ணத்தினிடைப் பொற்புடனே தாங்கி நின்றாய்
நற்பெருமை சேர்ஞான சம்பந்தன்–பொற்பார்

கவிகள் பதினொன்று காரணத்தால் பாடிப்
புவியிற் புகழ்ச்சைவம் ஓங்க–அவியாத

வையைப் பெருக்காக வந்தவுந்தன் மத்தியிலே
பொய்யை அகல்விக்கப் போட்டவுடன்–ஒய்யென்று

தக்க தமிழ்ப்பெருமை தானேயாய் நீயறிந்தாய்
மிக்க அதன் நலத்தை மேவினாய்–பக்கமதில்

அப்பதிக மேந்தி அருந்தமிழின் நற்பெருமை
எப்புவியும் கண்டு இனிக்குவண்ணம்–ஒப்பரிய

நற்செயலால் முன்னேற்றி நல்ஏ டகமடைந்து
விற்பன்னாய் நின்றிட்ட மேநீரே!–கற்பமெலாம்

நின்றாயே! நீணிலத்தில் நீயன்றோ மக்களுயிர்
பொன்றாமற் காத்தளிக்கும் புண்ணியவன்–நன்றான

மெய்த்தூய்மை செய்துஉடன் மேலான இன்ப நலம்
உய்த்து உயர்விப்பாய் ஓநீரே!–உய்த்தாலும்

ஏனோ நீ அன்றிருந்த எங்கள் பழந்தமிழின்
தேனாய் விளங்கியதென் னாடழித்தாய்–கோனான

சோழன் கரிகாலன் தோன்றிச் சிறப்புறச்செய்
வாழ்கா விரிப்பட்டினத்தையன்று–பாழாகச்

செய்திட்டாய் அச்செயலால் செம்மைத் தமிழ்க்கலைகள்
பெய்திட்டாய் உன்வயிற்றிற் பெற்றிட்டாய்–உய்வரிய

தமிழின் நலங்கண்டாய் சற்றெம்மை நோக்கி

அமிழ்தம் அளித்துக்காத் தாக்குவாய்–குமிழ் நிறைந்து