பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முடிவுரை

[1]

என் காஞ்சி வாழ்வு எட்டு ஆண்டுகளே யாயினும் அந்த எட்டு ஆண்டுகள் என் வாழ்வில் எதிர்பாராத வகையில் பலப்பல அனுபவங்களையும் வாழ்வின் சூழல்களையும் பெற எனக்கு உதவின எனலாம். இளமை கடந்து, காளைப் பருவமாகக் கழிந்த அந்த எட்டு ஆண்டுகளில் நான் காஞ்சியில் நல்லவரோடு கலந்து பழகி நலம் பெற்றிராவிடின், என் பிற்காலம் எப்படி அமைந்திருக்கும் எனச் சொல்ல முடியாது. கிராமங்களிலிருந்து காஞ்சிபுரத்துக்கு அக்காலத்தில் படிப்பிற்காகவும் பிற செயல்களுக்காகவும் வந்த என் உறவினர் சிலர் நிலைகெட்டமையின் என் அன்னையர் என்னைக் காஞ்சிபுரம் அனுப்பவே அஞ்சினர் என்பதை நூலுள் குறித்துள்ளேன். எனவே அவர்கள் அச்சத்தைப் போக்கும் வகையிலும் மிக எச்சரிக்கையாக நான் நடந்து கொண்டு, நல்ல பெயருடன் காஞ்சியைக் கடந்து சென்னை வந்து சேர்ந்தேன்.

இந்த நூலின நான் என் 55-வது வயதில் (1989) எழுதினேன் எனக் குறித்தேன். அதுவும் நான் தங்கி இருந்த ஏர்க்காட்டு மலை உச்சியில் குறிஞ்சி மாளிகையில் இருந்து எழுதினேன். அந்த மலைவாழ்வும் அதன் இடையில் அமைந்த மக்கள் நிலையும் எனக்கு இதை எழுத ஊக்கம் ஊட்டின. எனது நூல்களில் சில சொற்பொழிவுத் தொகுப்புக்களாக அமைய, சில ஆய்வு நூலாக அமைய, சில பயண நூல்களாகவும் கட்டுரைகளாகவும் அமைந்துள்ளன.

இவற்றுள் சிலவற்றை நான் மலை உச்சியிலிருந்தும், தனி இடங்களிலிருந்தும் எழுதினேன். என் 'இளமையின்


  1. நூல் வெளீயீட்டின் போது (1980) எழுதியது.