பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



142

காஞ்சி வாழ்க்கை



இந்தப் பள்ளிப் பணியில் என்nai மூழ்குவித்துக் கொண்ட காரணத்தாலே என்படிப்பும் எழுத்தும் பெரும் அளவு குறைந்துவிட்டன எனலாம். இன்றியமையாத ஆய்வுக் கட்டுரைகள்-சொற்பொழிவுகள் அடிப்படை பற்றி எழுதிய எழுத்துக்கள் தவிர்த்து மற்றவைகளை நான் நினைக்கவே முடியவில்லை. என் பழைய எழுத்துக்களை ஒருநாள் துருவி ஆராய்ந்த போதுதான் இந்த எழுத்துப் பிரதியும், தென்னாட்டுக் கோயில்கள் பற்றி ஆங்கிலத்தில் எழுதிய (250 பக்கம்) மற்றொரு எழுத்துப்பிரதியும் கிடைத்தன. உடனே இதை வெளியிடவேண்டுமென நினைத்து ஆவண மேற்கொண்டேன். (ஆங்கில நூலாகிய மற்றொன்றையும் விரைவில் வெளியிட ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டு வருகிறது.) என், 'எம்.லிட்.' பட்டத்துக்கு எழுதப் பெற்ற (82 ஆண்டுகளுக்குமுன்) தேவாரம் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரையும் இன்னும் வெளியிடப் பெறாமலேயே உள்ளது.

இந்த நூலில் ஒரு சிலரையும் கொள்கைகளையும் சற்று வன்மையாக காட்டியுள்ளதாக நினைக்கிறேன். இன்று எழுதுவேணாயின் இந்த அளவு வேகம் இருக்காது. ஆயினும் பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய எழுத்தினை அப்படியே விட்டு விடுதலே சரி என்ற எண்ணத்தில் மாற்றம் ஒன்றும் செய்யாமலேயே விட்டுவிட்டேன்.

இந்த நூலை எழுதிய காலத்துக்கும் இதில் காணப் பெறும் காஞ்சி வாழ்வின் காலத்துக்கும் இடையில் கால் நூற்றாண்டு கழிந்தது. அதற்கிடையில் எத்தனையோ மாறு பாடுகள் உண்டாகி விட்டன. அப்படியே இந்த நூல் எழுதிய அன்றைக்கும் இன்றைக்கும்--சுமார் பத்து ஆண்டுகள் இடைவெளியில்--எத்தனையோ மாறுபாடுகள் உண்டாகியுள்ளன. மக்கள் வாழ்க்கை முறை--வாழ்க்கைத் தரம் அரசியல் நெறி, பிறவகைகள் அனைத்திலும் எத்தனையோ மாறுபாடுகள் உண்டாகியுள்ளன. இந்நூலில் வாழ்ந்தவர்