பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

காஞ்சி வாழ்க்கை



நற்றவஞ்செய் நல்லார்போல் நாடி ஒன்றுந் தேடாமல்
உற்றதொரு மேலாம் உயர் நிலையை - பெற்று

விரைவாகச் செல்லும் வியன் நலஞ்சார் வெண்புனலே
உறவாக நான்உரைக்கும் ஓர்மொழிகேள் - கரைகாணா

உன்னைப் புகழும் உயர்வுடைய புலவரிலே
என்னை ஒருவனாய் எண்ணாதே-மன்னியதோர்

நற்புகழைப் பாடுமுயர் நாவலர்போல் நானுன்னைப்
பொற்புடனே பாடேனே யாயிடினும்-அற்புதமாய்

விந்தைச் சுழல்கிளப்பி வேகமாய்ச் சொல்லுமொரு
நந்தம் பாலாற்றின் நளிர்புனலே!- இந்தநிலை

தன்னிலே சென்றதன்பின் தாண்டி ஒரு காதவழி
உன்னினால் ஓங்கிடுநற் பொற்கோயில்-பன்னிடுவேன்

அக்கோயில் செல்வதன்முன் அண்டிஉனை வேகவதி
மிக்காய்க் கலப்பாள் நீ மேன்மைபெற்று தொக்கொன்றாய்ச்

சிலதூரம் சென்றபின்னர்த் தேர்ந்து அவ ளூர்கடந்து
முன்னின்ற சிவபுரத்தை முன்னியே-பொன்னியெனப்

பொன்கொழித்துச் செல்வாய் புகுந்தெம்மூர்க் கால்வாயில்
மின்னிக் கலந்து மிளிர்வுறுவாய்-தன்னிகரில்

வேகத்தே செல்வாய் விளம்புவேன் இப்பொருளை
நீகருத்தே நிற்க நிறுத்துவாய்-போக

சிவபுரத்தைத் தாண்டிச் சென்றவுடன் என்னூர்
சிவபுரம தாகச் சிவணும்-பவ நீக்கும்

வெண்மை நிறம் பூண்ட மிக்கான மண்டபமொன்
றுண்மை உனக்குதெற்காய் ஓங்கி நிற்கும்-கண்ணான

அம்மண் டபத்தை அடுத்தோங்கும் அங்கநகர்
இம்மென் பதன்முன்னே ஏகுவாய்-நம்முடைய