பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளம் விடு தூது

15



நற்கடம்பன் தாதை நவில்வா ருளப்பொருளாய்ச்
சொற்கடந்த தூயோனாய்த் தோன்றிடுவன்-அற்புதஞ்தேர்

அம்பலவன் தங்கும் அழகார் திருக்கோயில்
இம்பருல கென்ன எதிர்காண்பாய்-செம்பவள

மேனியனார் கோயிலின்பின் மேவுமென தில்லிருந்து
தானினைந்து நிற்குமெந்தன் தாயானாள் தூநினைவால்

எந்தன் சுகம்காண இன்பம் அடைந்திடுவாள்
துன்பம் அகற்றி எனைச் சோபிப்பாள் - அன்புளத்தில்

ஓர்மகனாய் நின்ற எந்தன் உயர்வேதன் வாழ்வாகச்
சீர்புவியில் வாழ்ந்திடுநற் செல்வமவள் - பேரான

செல்வம் எனக்கெனவே சேர்க்கத்தன் இன்பமெலாம்
ஒல்லாவே என்று ஒதுக்கினவள்-எவ்வாறும்

நான்மகிழ்ந்தால் தான்மகிழ்வாள் நன்மனத்தில் வாழ்வுற்றுத்
தேன்இனிக்கும் தீஞ்சொல்லைச் செப்பிடுவாள்-மாறான

ஒன்னார் தமக்கிளையா உள்ளத்த ளாய்நின்று
என்னாளும் என்னுயிர்க்கு இன்பமளி-பொன்னான

நற்கருணை கொள்வாள் நலஞ்சிறந்து என்னைவளர்த்
துற்றவனாய்ப் போற்ற உறுதிசெய்தாள் - பெற்றவளே

தானாய் இருந்தாலும் தந்தைபோல் கல்விநலம்
வேண அளித்தென்னை வித்தகனாய் - நானிலத்தே

எல்லாரும் போற்ற எழிலுடைய னாக்கினாள்
பொல்லாங்கைப் போக்கிக் குருவானாள் - நல்லாளாய்

ஐந்து பெருங்குரவர் ஆனாளே யாய்நின்ற
விஞ்சு நலமளிக்கும் மேதக்காள்-எஞ்சாத

நற்றாய்நல் லம்பலவன் நற்கோயிற் பொற்கரைமேல்
உற்று எனைக் காண உன்னுவாள்-அற்புதஞ்சேர்