16
காஞ்சி வாழ்க்கை
பாலாற்று வெள்ளமே! பண்பார் அவள்தனக்கு
வேலாயு தன்பாதம் வேண்டி இவண் - மால் நீக்கி
வாழ்கின்றே னென்றும் வழியூர்க்குக் காணாமல்
ஆழ்கின்றே னென்றும் மறிவிப்பாய் - சூழ்கின்ற
சுற்றத்தார்க் கெல்லாம் நீ சொல்லிடுவாய் என் நலத்தை
மற்றென்றன் மாவன்னை மாண்புடையாள்-பெற்றவள்போல்
நேசம் என்பால்கொண்டு நேர்மை நலம் பலவும்
பாசம் அகலாமல் பற்றிவைப்பாள்-ஆசையுடன்
காஞ்சித் திருத்தலத்தே காத்துஎனைப் போற்றியவள் வாஞ்சனைசேர் உள்ளத்தில் வாழ்வைப்பாள்-தீஞ்சுவைசார்
அவட்கும் நலம்பகர்வாய் அம்பலவன் காப்பால்
தவக்கமொன் றின்றித் தழைத்து-சுகத்துள்ளேன்
பாலாற்று நற்புனலே பகர்வாயென் சுற்றமெலாம்
மேலாக யானிங்கே மேவினேன்-கோலநிறை
நல்லின்பங் கொள்வாய் நற்றாய் பயனளிப்பாள்
அல்லும் பகலும் அறிவன்யான்- நில்லாது
ஓடிப் புகன்றால் உடனே உனைச்சேர
நாடிஒரு சேயாற்று நங்கையவள்-கூடிடுவாள்
அன்னவளோ டுற்று அழியாத இன்பமுடன்
பொன்கதிரோன் றோன்று புகழ்க்கடலுள்-மன்னிநலம்
சேர்ந்தே கலந்து தெவிட்டா இன்பதில்
ர