பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துமத பாடசாலை

49


முறை அவர்கள் எங்கள் கிராமத்துக்கு வந்து என்னுடன் உறைந்துள்ளார்கள்.

குமரன் அச்சகம் புதுமனை புதுவிழாவில் நான் கட்டாயம் இருக்கவேண்டும் என்பது அன்புக்கட்டளை. ஆனால் அன்றுதான் என் பாட்டனார் ஆண்டுக் கடன். என் அன்னையாரும் மற்றவரும் அத்தகைய கடன்களை ஒழுங்காகச் செய்யவேண்டும் என்று நம்புபவர்கள். தற்போது நான் அச்சடங்குகளையெல்லாம் விட்டு வெறும் ‘படையல்’ மட்டும் மேற்கொள்ளுகின்றேனாயினும், அப்போது அவர்தம் சமய உள்ளத்துக்கு ஊறுசெய்யக்கூடாது என்று கருதிய காரணத்தால் அதுவும் அவர் தம் பெற்றோருக்குச் செய்யும் கடன்கள் தவறலாகாது என்ற உணர்வினால் அக்கடன்கள் கழிக்கும் சடங்கிற்கு மாறுபாடு சொல்வதில்லை. எனது பாட்டன், பாட்டி இருவருக்கும் ஆண்பிள்ளைகள் இல்லையாதலாலும் நான் ஒருவனே பேரப் பிள்ளையாதலாலும் நானே அக்கடமைகளைச் செய்யக் கட்டுப்பட்டவனானேன்.

எனவே அன்று குமரன் அச்சக விழாவிற்குப் போவதா–பாட்டனார் சடங்கைச் செய்வதா என்ற கேள்விகளுக்கு இடையில் திண்டாடினேன். எனது அன்னையார் அத்திண்டாட்டத்தைப் போக்கிவிட்டார்கள். காஞ்சிபுரம் செல்வதற்கு வாலாஜாபாத்தில் 6-45க்கு ரயில்; காஞ்சி நிகழ்ச்சி 9 மணிக்கு. எனவே அதில் சென்றால் போதும், அதற்கு ஊரில் 5-30க்குப் புறப்படல் போதுமானதாகும். ஆகவே அதற்குள் ஆண்டுக்கடன் ‘சடங்குகளை முடிக்க ஏற்பாடு செய்து விட்டனர். மூன்று ஐயர்கள் விடியற்காலை’ மூன்று மணிக்கே வந்துவிட்டனர். நான்கு மணிக்குச் சடங்குகள் முடிந்தன; ஐந்துக்குப் படையல் இட்டு, உண்டு 5-30க்குப் புறப்பட்டுவிட்டேன். பிறகு புதுமனைப்புகுவிழாவில் கலந்து கொண்டேன். இதை அறிந்த குப்புசாமி முதலியார். அவர்கள் என் அன்பைப் பாராட்டிப் போற்றினர். அன்று

4