பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

காஞ்சி வாழ்க்கை


 யாளராக இருந்தார். அங்கம்பாக்கம் பஞ்சாயத்தைப் பார்வையிட வேண்டும் என்றும் நாங்களும் உடன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நானும் ஊர் செல்வதற்கு மகிழ்ந்தேன். இரவில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு மறுநாள் காலை பள்ளிக்குத் திரும்பிவிடலாம் என்று எண்ணிப் புறப்பட்டோம், பெரிய அன்னையாரிடம் சொல்லிவிட்டு ஊருக்குச் சென்றோம். ஊரில் எனது அன்னைமார் எங்களுக்கு உணவு ஆக்கிப் படைத்தார்கள். ஊர்க் கோயிலில் பஞ்சாயத்துக் கணக்கெல்லாம் பார்த்துவிட்டு, அப்படியே கோயிலில் இறைவனை வணங்கிவிட்டு, இரவு வீட்டிற்கு வந்து உணவுண்டு படுத்துக்கொண்டோம்.

எங்கள் பேச்சு பலவகையில் சென்றது. பஞ்சாயத்துப் பணிசெய்யும் நண்பர் அத்துறையில் வளர்ச்சிக்கு வழி இல்லை எனவும் கல்வித்துறையில் சென்றால் முன்னேறலாம் எனவும், ஆனால் அந்த ஆண்டு ஆசிரியப் பயிற்சிக்கு விண்ணப்பம் செய்யவில்லை எனவும் அடுத்த ஆண்டு விண்ணப்பம் செய்து சேர்வதற்குள் எத்தனையோ மாற்றங்கள் வந்து தன் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாகலாம் எனவும் கூறினார். எனக்கு அப்போது ஒருவர் நினைவில் தோன்றினார். எங்கள் ஊரை அடுத்த நெய்க்குப்பத்தில் பிறந்து நிலநூல் பேராசிரியராகி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிய திரு. சுப்பிரமணிய ஐயர் என்ன நன்கு அறிவார். எங்களுக்கும் அந்த ஊரில் நிலம் இருந்தமையின் பலவகையில் எங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் முதல் நல்ல வகையில் உறவு இருந்தது. அப்போது சூலை இறுதி அல்லது ஆகஸ்டு முதல் என எண்ணுகிறேன். அவரால் ஏதாவது செய்யக்கூடுமானல் நான் நண்பரை அழைத்துச் செல்வதாகக் கூறினேன். ஆயினும் நண்பர் பாடம் வேறுபட்டது என்றும் நிலநூல் தரமாட்டார்கள் என்றும் தயங்கினர். நான் ஐயர் அவர்கள் எல்லாம் வல்லவர் ஒன்றும் என்பொருட்டு எதையும் செய்வார் என்றும் முயற்சியில் கெடுதல் இல்லை என்றும் மறுநாட்காலையிலேயே