பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

காஞ்சி வாழ்க்கை


னும் என் உள்ளத்தில் நிலைத்துள்ளன. ஊருக்கு உதவ என்று நூற்றுக்கணக்கில் பணம் வாங்கி ‘ஏப்பம்’ விட்டவர்கள் இன்னும் உள்ளனர். ஐம்பத்தாறு ஊர்கள் கொண்ட அந்தத் தொகுதியில் எத்தனை எத்தனை வகையான மக்களைக் காண நேர்ந்தது. எனக்கு வேலை செய்வதாகப் பணம் வாங்கிக்கொண்டு, எதிரிக்கு வேலை செய்ய நினைத்த துரோகிகளும் இன்னும் வாழ்கின்றனர்.

நாங்களும் ஒவ்வொரு ஊரிலும் கூட்டமிட்டு, எங்கள் கொள்கைகளைத் திட்டமாக விளக்கினோம். மற்ற இருவேட்பாளர்களைக் காட்டிலும் நானே மேடை ஏறி மக்கள் உள்ளங்கொள்ளப் பேசிய தன்மை அனைவரையும் கவர்ந்தது. எனது மாணவ நண்பர்கள் ஊருக்கு இருவராக இராப்பகலாகத் தங்கி, அவ்வூர் வாக்காளர்களிடம் பரிந்து பேசி வாக்குகளைப் பெற முயன்றனர். அவர்கட்கெல்லாம் அவ்வவ் ஊரார் மகிழ்வோடு உணவு அளித்துக் காத்தனர். எனது உக்கல் மாமனார் திரு. கோபால முதலியார் அவர்களும் அவர்தம் குடும்பமும், முழுக்கமுழுக்கப் பத்து பதினைந்து நாட்கள் தேர்தல் களத்திலேயே மூழ்கி இருந்தனர். இவர்களையன்றி உதவிய பல பெரியவர்களை இன்னும் என்னால் மறக்க முடியாது. அவருள் முக்கியமானவர் திரு. காளப்பர் அவர்கள். அவர் தம் தேர்தல் உறவே பின் நான் காஞ்சியில் அச்சகத் தொழில் தொடங்க உதவியாக நின்றது. இன்றும் அவர் அதே தமிழ்க்கலை அச்சகத்தை ‘முத்தமிழ் அச்சகம்’ என்ற பெயரில் நடத்தி வருகிறார். அவரை யன்றிக் காவாம்பயர் திரு. இராசகோபால் முதலியார், மாகறல் திருமாகறல் முதவியார், இளையனார் வேலூர் சின்னசாமி முதலியார், நடேச முதலியார், காவாந்தண்டலம் பச்சையப்ப முதலியார், வாடாதவூர் மலைக் கொழுந்து முதலியார், அவளூர் துரைசாமி நாயகர் போன்ற பல அன்பர்கள் என் தேர்தலில் வெற்றி பெற உதவினர். எனது கிராமத்தில் எனக்கு உற்றவர் என்பவரே எனக்கு மாறுபட்டு நிற்க, அவருக்கு வாய்ப்பூச்சாகச் சில வெண்-