பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11௦

காட்டு வழிதனிலே



(Water saw its Lord and blushed) என்றுஒரு கவிதை வரியைத் தாளிலே பொறித்துக்கொடுத்தார். அவருக்குத்தான் பரிசு கிடைத்தது. அந்தக் கவிதை வரிஎத்தனையோ செய்திகளை, உணர்ச்சிகளைச் சொல்லாமற் சொல்லிவிட்டது. நம்முள்ளத்திலே அவை யெல்லாம் உயிர்த்தெழுந்து நிறைகின்றன. அந்த வரியை நினைக்க நினைக்கக் கருத்தும் உணர்ச்சியும் பெருகுகின்றன. அதனால்தான் கவிதைக்கு நாம் அத்தனை உயர்வு கொடுக்கிறோம்.

வயல் வளம் மிகுந்த மருத நிலத்திற்கு ஒரு தனிப் பட்ட அழகிருக்கிறது. "தண்டலை மயில்களாட ” என்று தொடங்கும் ஒரு பாட்டிலேயே அதன் வனப்பைக் கம்பன் நமக்குக் காட்டிவிடுகிறான். பழங் காலத்துப் புலவனொருவன் இதே இயற்கைக் காட்சியை எப்படி நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறானென்று இப்பொழுது பார்ப்போம்.

புலவன் பாட வந்தது ஒருவனுடைய வள்ளன்மையைப்பற்றி. அவன் எப்படிப்பட்டவன் என்றால் புகழ முடியாத அவ்வளவு பெரிய கொடைத் திறம் உடையவன். அவனுக்குச் சொந்தமானது கழனிகள் சூழ்ந்த ஓர் ஊர். ஆதலால், கவிஞன் அவனுடைய செழுமை மிக்க கழனியூரை வருணித்து அதன் வழியாக அவனுடைய புகழ முடியாத வள்ளன்மையைப் பற்றிக் குறிப்பாக எடுத்துக் காட்டுகிறான்.

நன்றாகக் கொழுத்து மதமேறி யிருக்கும் எருமையினுடைய கண்கள் சிவந்து தோன்றும், அப்படிப்பட்ட எருமையொன்று ஒரு கரும்பு